|
உ. |
| வடுகாய் முன்தோன்றி வடநாவலே | | வளராரியத்தின் கிளைகள்பின் பல்கிக் | | குடமேற் பலகுடும் பாகிய | | கோலங் கொண்டபின்னும் குமரியா மன்னும் (முதல்) |
|
13. செந்தமிழ்ச் சிறப்பியல் |
|
'அருட்சோதித் தெய்வம் என்னை' என்ற மெட்டு |
பண் - (பந்துவராளி) தாளம் -ஈரொற்று |
1 |
| பாரில்முதல் தாய்மொழியாய்ப் பரந்தெழுந்த செல்வம் | | பனிமலையுந் தோன்றுமுன்பே பயின்றுவந்த செல்வம் | | காருலவு குமரிமலைக் கண்வளர்ந்த செல்வம் | | கண்ணுதலாற் குமரிமக்கள் கண்டறிந்த செல்வம் | | ஆரியத்தின் அடிப்படையாய் அமைந்தபெருஞ் செல்வம் | | ஆனபெரு மொழியிலெல்லாம் அளவிநின்ற செல்வம் | | ஏரணமெய் முதற்பலநூல் இயன்றகலைச் செல்வம் | | இலக்கணஞ்சற் றிணையுமின்றி இலங்குகின்ற செல்வம். |
|
2 |
| எளிவருமுப் பானொலியால் இயங்குகின்ற செல்வம் | | எப்பொருளும் தகுந்தசொல்லால் இசைக்கவல செல்வம் | | அளிமிகுநன் னடுநிலையாய் ஆண்டுவந்த செல்வம் | | அனைவரையும் உறவென்றெண்ணும் அன்புநிலைச் செல்வம் | | வளிநிலையில் வாழ்முனிவர் வகுத்தமறைச் செல்வம் | | வையகத்தும் வீடுபெற வழியுரைக்குஞ் செல்வம் | | களிமகிழ்கொண் டாடமுதற் கடவுள்கண்ட செல்வம் | | கலித்தொகைதீந் திருக்கோவை கருத்துருக்குஞ் செல்வம். |
|