|
18. தமிழே தனிமொழி |
|
'நாடெங்கும் புகழும் கிரீடாதிபநிதி' என்ற மெட்டு |
ப. |
| தானாக முந்திய தாய்மொழியாய் வந்த தமிழே தனிமொழி |
|
உ.1 |
| மேனாடுசார் இலத்தீன மொழியிலும் | | மேவுங் கிரேக்கஞ் செர்மானியிலும் | | வானோர் மொழியென்கீர் வாணமதிலும் நாம் | | காணும் பல சொல்வேர் மாணுந்தமிழ் (தானாக) |
|
2 |
| ஆயிரக் கணக்கில் தூய தமிழ்ச்சொற்கள் | | சேயநாள் மறைந்து போய்விடினும் | | ஆயும் பொருளெது வாயினும் இந்நாளும் | | ஏயும் தென்சொல் புதிதா யுடனும் (தானாக) |
|
19. தமிழே தேவமொழி |
|
'நீலகண்ட மகாதேவா' என்ற மெட்டு |
பண் - (வசந்தா) தாளம் - ஈரொற்று |
| தேவ மொழியுந் தென்னன் தமிழே | | தெளிவு கொண்டு திளைக்க அமிழே |
|
து. ப. |
| ஆவி யிறந்த மாந்தர் போன்றே | | ஆரியந் தெய்வ மாகுஞ் சான்றே (தேவ) |
|
அ. |
| தானே தோன்றித் தலைமை கொண்டு | | தனியொரே குலங்கடவுள் கண்டு | | நானிலம் நண்நடுவு நின்று | | நாடும்பொது நன்மறையும் விண்டு (தேவ) |
|