பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்33

39. வடமொழி வந்தவழி
பண் - (பியாகு)
தாளம் - முன்னை
ப.
வடமொழி வந்தவழி - தெரியுமா?
உ. 1
வடமேற் கணவாய் வழியாக வந்து
    வதித்தனர் ஆரியர் முதற்கணே சிந்து
கடுமை யுடன்சிறு பான்மை கலந்து
    கரந்ததே யவர்மொழி கடுகி மறந்து
(வட)
2
ஆரிய அடியும் அருந்தமிழ் நிலவும்
    அதனொடு வடதிர விடம்மறை குலவும்
சீரிய செந்தமிழ்ச் சொற்களே பலவும்
    செயற்கை யாம்சமற் கிருதத்தொடு நிலவும்
(வட)
3
வெண்ணிறத் தால்நிலத் தேவரே என்று
    வேதியர் தம்மையே விளம்பிய துண்டு
நண்ணிய அவர்மொழி விண்மொழி என்று
    நம்பியே தமிழரும் நயந்தனர் பண்டு
(வட)
40. தமிழ் இயல்புந் திரிபும்
(இசைந்த மெட்டிற் பாடுக)
1
அருமை முத்தமிழ்ச் சீரும்
    ஆரி யத்தடி வேரும்
திரவி டப்பெருந் தூரும்
    தென்மொ ழித்திறம் தேரும்.