|
57. மறைமலையடிகள் மாண்பு |
|
பண் - (கலியாணி) தாளம் - ஈரொற்று |
ப. |
| தவத்திரு மறைமலையடிகள் தமிழே தமிழன் உயரும் படிகள் |
|
து. ப. |
| தகைத்து நிற்குங் கொடுமுடிகள் தகர்ந்து விழுமே | | தவிடுபொடிகள் | | சிவத்திரு வருள்கொடு மானச் | | செந்தமிழ் விடுதலை காணச் | | சவக்கடு வடமொழி யான | | சடங்கொடு வழிபடல் நாணத் (தவத்) |
|
உ. 1 |
| தமிழொடு வடமொழியுங் கற்றுத் தகுபுலமை யாங்கிலமும் உற்றுத் | | தருக்கொடு செருக்கறவே யற்றுத் தனித்தமிழ்த் திறம் கனியப்பெற்று | | ஆன்றவிந் தடங்கிய கொள்கை | | சான்றெதிர் மடங்கிட வெல்கை | | ஏன்றரு நூல்களை நல்கை | | எதிரியும் வாழ்ந்திடவுள்கைத் (தவத்) |
|
2 |
| தகத் தகவெனத் தங்கமேனி தலையுத் தாங்குத்துவர் ஓர் வானி | | தமிழுணர்ச்சி ததும்பும் மானி தருஞ் சொற்பொழிவு தவழும் ஆனி | | காமுறு பண்குர லென்னத் | | தாமரை கண்களை யுன்ன | | மாமறை நுண்பொருள் துன்னத் | | தாமுரை பண்பருள் ஒன்னத் (தவத்) |
|