பக்கம் எண் :

50இசைத்தமிழ்க் கலம்பகம்

57. மறைமலையடிகள் மாண்பு
பண் - (கலியாணி)
தாளம் - ஈரொற்று
ப.
தவத்திரு மறைமலையடிகள் தமிழே தமிழன் உயரும் படிகள்
து. ப.
தகைத்து நிற்குங் கொடுமுடிகள் தகர்ந்து விழுமே
தவிடுபொடிகள்
சிவத்திரு வருள்கொடு மானச்
        செந்தமிழ் விடுதலை காணச்
சவக்கடு வடமொழி யான
        சடங்கொடு வழிபடல் நாணத்
(தவத்)
உ. 1
தமிழொடு வடமொழியுங் கற்றுத் தகுபுலமை யாங்கிலமும் உற்றுத்
தருக்கொடு செருக்கறவே யற்றுத் தனித்தமிழ்த் திறம் கனியப்பெற்று
ஆன்றவிந் தடங்கிய கொள்கை
சான்றெதிர் மடங்கிட வெல்கை
ஏன்றரு நூல்களை நல்கை
எதிரியும் வாழ்ந்திடவுள்கைத்
(தவத்)
2
தகத் தகவெனத் தங்கமேனி தலையுத் தாங்குத்துவர் ஓர் வானி
தமிழுணர்ச்சி ததும்பும் மானி தருஞ் சொற்பொழிவு தவழும் ஆனி
காமுறு பண்குர லென்னத்
தாமரை கண்களை யுன்ன
மாமறை நுண்பொருள் துன்னத்
தாமுரை பண்பருள் ஒன்னத்
(தவத்)