பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்51

58. அடிகள் தமிழனுக்கு அறிவுறுத்தல்
பண் - (சிந்து பைரவி)
தாளம் - முன்னை
1
ஆரிய வேடரின் அயர்ந்தனை மறந்தே
அறியாமை மீதூர அடிமையாய்த் தளர்ந்தே
சீரிய கோமகன் சேயைநீ யுணர்ந்தே
செந்தமிழ் பொழியினால் தேறுவை யணர்ந்தே.
2
ஆங்கில வரசினால் அகக்கணுந் திறந்தே
அறிவினால் மறுமுறை அகமதிற் பிறந்தே
ஈங்குநல் லாட்சியை யேற்றினை சிறந்தே
ஏதிலர் ஏமாற்றை எதிர்த்தனை விறந்தே.
3
ஈரடி மைத்தனம் ஈங்கிருந் தனவே
இவற்றுளே ஆரியம் எரியள றெனவே
சாரயல் ஆங்கிலம் சாய்ந்ததும் கிழமை
சாணள வேறியே சறுக்கின முழமே.
4
விடுதலை புகுந்ததாய் வியந்தனை புகழ்ந்தே
விழுத்தமிழ் அரணையே வீழ்க்குவை அகழ்ந்தே
அடிதலை தடுமாறி அறிவுரை யிகழ்ந்தே
அவலைநி னைத்துரலை இடித்தனை மகிழ்ந்தே.
5
தமிழினுக் குலகினில் தகுவதே தலைமை
தமிழரும் அடையவே தாழ்விலா நிலைமை
இமிழ்தரு மொழியியல் எய்துக நலமே
எமதுமெய் வரலாறே எழுகவே வலமே.
6
சிவநெறி மால்நெறி செந்தமிழ் நெறியே
செம்மையிற் சிவனடி சேரவே குறியே
அவமுற வடமொழி அறைவது வெறியே
அதுதெய்வ மொழியெனல் அறியாமை அறியே.