பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்59

66. முத்திருமேனியர் (திரிமூர்த்திக்) கொள்கை தமிழரதாகாமை
'தங்கத்தி லேயொரு குறையிருந் தாலும்' என்ற மெட்டு
1
முத்திரு மேனியர் கொள்கை யிந்நாட்டில் எத்துணையும் இல்லை -பெரு
முத்தொழி லும்இறை ஆற்றுவன் என்பதே ஒத்ததாம்இவ் வெல்லை.
2
சிவனொடு திருமால் செந்தமிழ்த் தெய்வம் சீரிய வரலாறே சொலும்
இவரிரு வருமோர் இறையே எய்திய இடத்தாற் பெயர் வேறே.
3
சிவன்திரு மாலெனும் இருவரும் ஒண்ணே அறியார் வாயில்மண் - ஓர்
அரியநல் லுண்மை அறிவாய் இந்த அழகாம் பழமொழிக் கண்.
4
சிவன்முத் தொழிலைச் செய்வான் என்றே செப்பும் மெய்கண்டான் - கரி
யவனும் அதுவாக் கடவுள் வாழ்த்துக் கம்பன் செய்கின்றான்.
5
பிரமனைத் தெய்வம் என்றே தமிழர் பேணியதே யில்லை - தமிழ்
மரபுறு மதத்தை ஆரியப் படுத்த மருவும்அவன் தொல்லை.
67. தமிழ்த் திருமணம்
'பசனை செய்வோம் கண்ணன் நாமம்' என்ற மெட்டு
ப.
தமிழிலே திருமணஞ் செய்க - பழந்
தமிழரின் முறைகளே தழுவியமைக
தன் மதிப்புடன் வைக (என்றும்)
(தமிழிலே)