பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்61

     பல்லா யிரந்தமிழ்ப் பண்டைநூல் போயின
     கல்லாது தமிழர் கண்டகர் ஆயினர்
எளியரும் நல்வலியராம் இவ் விருபதாம் நூற்றாண்டிலும்
இழிஞன் என்னும் பிறப்புநீங்கி இழந்த பெருமை ஈண்டவே.
     தேவ மொழியெனத் தெட்டுங்கீழ் ஆரியம்
     தீவிய தமிழின் தெற்றெனத் தேறியே
கோயில் வழிபாடரங்கு குடும்பச் சடங்கு திருமணம்
வாயில்மொழி தமிழே யென்றும் வழங்கி வாழி தமிழனே.
69. தமிழுயரத் தமிழனுயர்தல்
'பசனை செய்மனமே' என்ற மெட்டு
தமிழன் உயர்வழியே
தமிழின் உயர்நிலையே - தன்மான மிழந்துள்ள
து. ப.
இமிழும் வடமொழியே
இறைவன் வழிபாடத னின்றும் ஒழியே
(தமிழன்)
உ.
அமிழ்தரு குமரியில் அமைந்த செந்தமிழே
     ஆரிய மதனுக்கும் அடிமணை முதலே
உமிழும் இழிவு தமிழ்
     உறவே அடிமைத் திறமடைந் துழலும்
(தமிழன்)
70. தமிழிசை நாடகமே கருநாடக சங்கீதமும் பரதநாட்டியமும்
'கீதம் இனிய குயிலே' என்ற மெட்டு
1
கூவும் இனிய குயிலே
     குமரிநிலத் தென்னிசையே
மேவு கருநாடகமாய்
     மிளிர்கின்ற தெனக் கூவாய்.