|
2 |
| ஆடும் அழகார் மயிலே | | அற்றை நாடகத் தமிழே | | கூடும் பரதம் என்றே | | குலவும் இன்றென அகவாய் |
|
3 |
| பவழக் கூர்வாய்க் கிளியே | | பண்டை முத்தமிழ் நூல்கள் | | எவணி றந்தன எனவே | | இனிய குரலிற் கிளவாய். |
|
71. தமிழை மறைப்பதால் முந்நூல் கெடுதல் |
|
'கைத்தலம் நிறைகனி' என்ற மெட்டு |
1 |
| தமிழை மறைப்பதாலே தாங்கெடுமே முந்நூலே | | தாழாமலே யிக்காலே தடுமாலே | | இமிழ்நீர் வரைப்பின்மேலே இல்லை வேறிது போலே | | எய்தா தடிமைப் பாலே எடு வேலே. |
|
2 |
| வரலாறு மாந்தனூலும் வளர்கின்ற மொழிநூலும் | | வழி தெரியாமல் மேலை நாட்டாரும் | | திரிவாகும் ஆரியத்தைத் தென்னூலின் முன்னூலாகத் | | திண்டாடி மெய்யறிய மாட்டாரே. |
|
3 |
| உண்மையை மாற்ற என்றும் ஒருவராலு மாகாதே | | ஒல்லும் இறையு மாற்றின் இறையாகான் | | ஒண்மையொடு நன்மையும் ஓங்கும் குடியரசே | | உண்மை கடைப்பிடித்தல் முறையாகும். |
|
4 |
| தமிழே உலகமுற்றும் தழுவிய மொழியாகும் | | தகுதியாய் இதையொத்துக் கொள்வீரே | | திமித குமுதமென்று திமிலர்போல் விண்ணிற் சென்று | | திங்களை யுற்றவர்க்குச் சொல்வீரே. |
|