|
(அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய மண்டிலம்) |
| மொழியோடு போவ தில்லை முத்தமிழ் அழியின் மும்மா | | விழிதரும் அறிவி யல்கள் வியனிலம் மயங்கு வண்ணம் | | அழிவுறும் அதனால் மேலை றிஞரே தமிழைக் காக்க | | பழிமிகும் இழிவை நச்சும் பதர்களே தமிழர் மன்னோ. |
|
72. மொழி வாழிடம் மக்கள் வாயே |
|
பண் - (காப்பி) தாளம் - முன்னை |
சித்தார் வண்ணம் |
1 |
| தமிழ் - வாழ்வது தமிழர் வாயினிலே | | அவர் - வழங்கா விடின்அது மாய்ந்துவிடும் | | எந்த - வாழ்மொழியும் மக்கள் வாயொலியே | | தனி - வடிவ மன்றுபெரு வாய்மையிதே. |
|
2 |
| தமிழ் - பெருமொழியே கெடப் பெறுவதில்லை | | என்று - பேசுவதோ மிகப் பெரு மடமை | | முதல் - வறுமொழியாய் வந்த வடமொழியால் | | தமிழ் - வளமை யெல்லாங் கெட்டு வறண்டதுவே. |
|
3 |
| முனம் - ஆங்கிலத்தால் தமிழ் அழிந்ததோ பார் | | இனி - ஈங்கிந்தியும் வரின் இறவாதென்பார் | | அந்த - ஆங்கிலம் தமிழையோ அழித்ததில்லை | | ஆயின் - ஈங்குள்ள ஆரியம் அழிப்பதுவே |
|
4 |
| இன்று - நாட்டிலே வழங்கும் நடையறிவார் | | தமிழ் - கேட்டை யடையுமென்று கிளந்திடுவார் | | இதை - மாற்றி யுரைப்பவரோ மொழியறியார் | | விளக் - கேற்றிய தறியவரோ விழிதெரியார். |
|