|
5 |
| பலர் - வண்டமி ழென்றுபல் வடசொற்களை | | மிக - வழங்கியே பெரிதும் மகிழுகின்றார் | | மொழிப் - பண்டித மில்லாத படியினாலே | | கடும் - பாம்பையே மீனெனப் பற்றுகின்றார். |
|
6 |
| பெரும் - பட்டம் பெற்றாருமே பதவிபெறின் | | அதிற் - பதிவுற வேவழி பார்த்திடுவார். | | இனிச் - சற்றும் உயர்கல்வி சாராதார் | | பெருந் - தலைமை பெறின்எந்த நிலைமையரே. |
|
73. வழக்கற்ற தென்சொல்லை வழங்கல் |
|
'விளக்கு மாற்றை யெடுத்துக்கொள்ளடி' என்ற மெட்டு |
1 |
| வழங்காத தென்சொல்லை வழங்க வேண்டும் - அதை | | வழங்க வேண்டாவென்றே வம்பர் சொல்வார் - தமிழ் | | அன்பில்லா தார் வேறே | | என் சொல்லுவார் (வழங்) |
|
2 |
| வடசொல்லைத் தமிழர்முன் வழங்கவில்லை - அதன் | | வழக்காற்றை வடவர்கள்தாம் ஆற்றினார் - அது | | தே மாற்றமே என | | ஏமாற்றியே (வழங்) |
|
3 |
| இருபதி னாயிரம் சொற்கள் ஈண்டும் - அந்த | | இந்தியைப் பேசவே கற்க வேண்டும் - ஆயின் | | வழங்காச் சில தென்சொல ் | | விளங்காவென்பார(வழங்) |
|
4 |
| முன்மொழி யாம்தமிழ் மென்மொழியே - அது | | வன்மொழி சேர்ந்திடின் வாழ்வதில்லை - இங்ஙன் | | வீழ்வுறாமல் வழி |
|