பக்கம் எண் :

68இசைத்தமிழ்க் கலம்பகம்

உரைப்பாட்டு
நன்கூலம் ஒன்றையே நாடி வந்தொருவன்
        நாய்கன் கடையிற் கேட்டால்
எண்கூலக் கலவையில் நீகேட்ட திருப்பதால்
         ஏற்றுக்கொள் என்ன மாட்டான்.
(தமிழ்)
77. தமிழ் இயன்மொழி திரவிடம் திரிமொழி
'சங்கரா சிவ சங்கரா சிவ' என்ற மெட்டு
1
வாழிய தமிழ் வாழிய தமிழ் நாடெனும் பெயர் என்றுமே
வாழியவே திராவி டம்எனில் வடவர் நாடதில் துன்றுமே.
2
திரவிடம் என்னும்பேர் தமிழ்என்னும் தென்சொல்லின் திரிபாயினும்
தீந்தமிழ் தன்னைக் குறித்த காலமும் தென்மலை யேறிப் போனதே.
3
தந்தை யின்பெயர் தாங்கினும் மக்கள் தந்தையின் வேறே யல்லரோ
செந்தமிழ் திரி திரவிடங்களும் செந்தமிழாக வல்லவோ.
4
எந்த மன்மொழி பேசினும் பிறர்இந்த நாடொரே யுரிமை
செந்தமிழ்க் கெதும்தீங்கு செய்யாமற் சேர்ந்து வாழ்ந்திடின் அறிமெய்.
5
எந்த நாடுமே கொண்டுள்ள பெயர் சொந்தமாமொழி யாலன்றோ
அந்த நாட்டினில் ஏனையர் குடிஅண்டி வாழ்வது தானின்றோ.
6
ஏந்து தாய்மொழி என்ன வென்றுதான் எடுத்துரைக்கவே விரும்பின்
ஆந்திரத் தமிழன் எனத்தகும் அடைமொழி கொடுத்திடுமின்.
7
திரைந்த பால்தயி ராயி னும்அது திரும்பவும் பாலே யாகுமோ
திரிந்து போகிய திரவிடம் பின்னும் தெளிந்த நற்றமிழ் ஆகுமோ.