|
உரைப்பாட்டு |
| தனிப்பா லென்று சொல்வது தருபவர் பாலொடு தண்ணீர் கலந்த பின்பே | | தனித்தமி ழென்று சொல்வதும் தமிழொடு பிறசொல்லைத் தகவிலார் கலந்த பின்பே |
|
ப. |
| கடன்கொள்ளு மொழிகளே கடுகி வளருமென்று கழறுவ ரேசிறியார் | | வடமொழிகளுக் கெல்லாம் வாழ்வருள் தமிழின்சொல் வளந்தனை அவரறியார் |
|
(உரைப்பாட்டு) |
| பெருஞ்செல்வன் வேண்டாது பிறர்பாற்கடன் கொள்ளின் | | பெயரும் பொருளும் கெடுமே | | பிறசொல்லை வேண்டாத தமிழுங் கடன்கொண்டு | | பெரிதுங் கெட்டது திடமே. |
|
ப. |
| தமிழைக் கெடுப்பதே தம்பெரும் பணியெனத் | | தாங்கியுள்ளார் சிலரே | | அவரைத் தெரிந்துகொண் டகன்று விலகிநிற்க | | அருந்தமிழ் ஆர்வலரே. |
|
உரைப்பாட்டு |
| பெற்ற தாயைக் கொல்லுவதும் பெரிதுந் தகுமென்பார் | | பிறந்துளார் இவ்வுலகிலே | | உற்ற தமிழைத் தள்ளுவதும் உகந்த தென்பார் தீயவழி | | உறுபொருள் சேர்ந்த அளவிலே. |
|
ப. |
| கலவை மொழிதன்னைக் கைவந்த தமிழென்று | | காட்டுவர் போலியரே | | கலந்துள்ள பிறமொழிச் சொற்களை யகற்றிடின் | | காண்பது கால்தமிழே |
|