|
உரைப்பாட்டு |
| நன்கூலம் ஒன்றையே நாடி வந்தொருவன் | | நாய்கன் கடையிற் கேட்டால் | | எண்கூலக் கலவையில் நீகேட்ட திருப்பதால் | | ஏற்றுக்கொள் என்ன மாட்டான். (தமிழ்) |
|
77. தமிழ் இயன்மொழி திரவிடம் திரிமொழி |
|
'சங்கரா சிவ சங்கரா சிவ' என்ற மெட்டு |
1 |
| வாழிய தமிழ் வாழிய தமிழ் நாடெனும் பெயர் என்றுமே | | வாழியவே திராவி டம்எனில் வடவர் நாடதில் துன்றுமே. |
|
2 |
| திரவிடம் என்னும்பேர் தமிழ்என்னும் தென்சொல்லின் திரிபாயினும் | | தீந்தமிழ் தன்னைக் குறித்த காலமும் தென்மலை யேறிப் போனதே. |
|
3 |
| தந்தை யின்பெயர் தாங்கினும் மக்கள் தந்தையின் வேறே யல்லரோ | | செந்தமிழ் திரி திரவிடங்களும் செந்தமிழாக வல்லவோ. |
|
4 |
| எந்த மன்மொழி பேசினும் பிறர்இந்த நாடொரே யுரிமை | | செந்தமிழ்க் கெதும்தீங்கு செய்யாமற் சேர்ந்து வாழ்ந்திடின் அறிமெய். |
|
5 |
| எந்த நாடுமே கொண்டுள்ள பெயர் சொந்தமாமொழி யாலன்றோ | | அந்த நாட்டினில் ஏனையர் குடிஅண்டி வாழ்வது தானின்றோ. |
|
6 |
| ஏந்து தாய்மொழி என்ன வென்றுதான் எடுத்துரைக்கவே விரும்பின் | | ஆந்திரத் தமிழன் எனத்தகும் அடைமொழி கொடுத்திடுமின். |
|
7 |
| திரைந்த பால்தயி ராயி னும்அது திரும்பவும் பாலே யாகுமோ | | திரிந்து போகிய திரவிடம் பின்னும் தெளிந்த நற்றமிழ் ஆகுமோ. |
|