|
(உருத் தொடர்ச்சி) |
| இந்தியிந் நாட்டிலே வந்த நாளில் நின்று | | ஏதும் பொதுமக்கள் எதிர்த்ததே அங்கின்று | | எந்தப் பொதுத் தேர்தலும் புலவோர் நின்று | | இன்றமிழ் காத்திடவும் இல்லையே (செந்) |
|
88. பழந்தமிழே திரவிடத்தாய் |
|
'செந்தாழம் பூவுந் தேன் கமழும்' என்ற மெட்டு |
ப. |
| எல்லா மக்களும் மறுதலிக்கினும் | | ஈன்றவள் அயலாகுமோ. |
|
உ.1 |
| சொல்லா லறியும் சான்றுகளுடன் | | தொன்னூலும் வரலாறுமே | | எல்லா வழியும் திரவிடத்தாய் | | என்றே தமிழைக் கூறுமே (எல்லா) |
|
2 |
| தென்னோர் தாயகம் குமரி நாடெனத் | | தீந்தமிழினால் தெரியுமே | | என்னேனும் திரவிட மொழியிதை | | இயம்புமோ வொரு வரியுமே (எல்லா) |
|
3 |
| இந்நாவலத் தின்கண்ணே வழங்கும் | | எல்லாத் தமிழ மொழிகளும் | | தென்னே நோக்கி வரவரமிகத் | | திருந்தும் இயலும் ஒலிகளும் (எல்லா) |
|
4 |
| மெல்லோசைகளே தமிழில் இன்றும் | | மிகுந்திருக்கவும் திரவிடம் | | வல்லோசைகளே மிகவும் அன்றும் | | வதிந்திருக்கவே பெறுமிடம் (எல்லா) |
|