பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்79

5
தென்னூல் ஆயிரம் ஆண்டுகட்குமுன்
    திரவிடத் தெதும் இல்லையே
பன்னூல் துறையும் தமிழிலக்கியம்
     பழமதுரையின் எல்லையே
(எல்லா)
6
பின்னே யாரியம் மேற்படை யெனப்
    பெருகினும் அது பிரியுமே
முன்னே தமிழே அடிப்படையென
    முதுதிரவிடம் தெரியுமே
(எல்லா)
89. தமிழைப் பழித்தல்
பண் - (காப்பி)
தாளம் - சார்பு
ப.
தமிழைப் பழிக்க லாமோ - தாயான
து. ப.
இமிழ்நீர் வரைப்பில் இதன்நேர் சொல்லப் போமோ
எதிராள ரானாலும் இதைமறுப்பார் தாமோ
(தமிழைப்)
உ.1
குமரிக் கண்ணே மாந்தன் குழவிக் காலந் தோன்றிக்
     குறிஞ்சி முல்லைப் பின்னர் மருதந் தவழ்ந்தோங்கித்
திமிறிக் கொடுந்தமிழ் திரவிடமாய்ச் சென்று
    திகழும் ஆரியத்தின் திரள்முதலாய் நின்ற
(தமிழைப்)
2
உள்ளக் கருத்தெல்லாம் தெள்ளக் களிபொங்க
    உணர்த்திப் புலனைந்தும் திளைத்துப் பிழைப்பிங்குக்
கொள்ளத் துணையாகிக் குன்றாப் பன்னூல் தந்து
    கூறும் இருமைநற் பேறும் பெறவந்த
(தமிழைப்)