பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்95

106. இலக்கணவறிவில்லா எழுத்தாளர்
'மாங்காய்ப்பாலுண்டு' என்ற மெட்டு
1
இலக்கண மேயின்றி இந்நாளி லேபலர்
இலக்கியம் இயற்றுகின்றார் - அவரை
விலக்கியே பயிற்றல் நன்றே.
2
எழுத்தை யறிந்ததும் எழுத்தாளர் என்றுபேர்
ஏற்றுக் கொள்வார் பலரே - அதனை
மாற்றச் சொல்வார் இலரே.
3
அறிவிய லுணர்வின்றி அமருங் காதல்ஒன்றே
வெறியாகச் செய்யுள் செய்வார் - பொருளும்
எரியாகும் நெய்யிற் பெய்வார்.
4
புலமையில் லாதவர் புதுநூலி யற்றுதல்
நிலமே யில்லா வெற்றனே - மனையும்
வளமானதாய்க் கட்டலே.
5
இணையாரு மில்லாத எழிலாரும் மறைமலை
எழுத்தும் ஓரெழுத்தோ வென்றான் - நெஞ்சின்
அழுத்தமோ அழுத்த நின்றான்.
6
தென்சொல்லின் புணர்ச்சியே
தினையேனும் அறியாதார்
முன்சொல் ஈற்றில் லகர - மெய்ப்பின்
என்கொல் வன்மெய் பகர.
7
தமிழை அறியாதார் தமிழெழுத்தை மாற்றத்
தகுதியுண்டோ நாட்டிலே - வாழ்வார்
மிகுதியும் ஏமாற்றிலே.