|
| அடிவாரத்தின் கண்ணே தோன்றி - முல்லை | | ஆயர் புல்லாம் பண்ணே யூன்றிப் - பின்பு | | மருத நாடகம் மருவி யூரொடு | | கருது நாடகம் கல்வி மூவகை | | கொண்டதே தமிழ் கூறுமுக் காலமும் |
|
| குறித்தே முனைவரும் கூடிக் - கல்வி | | கூர்ந்தார் அனைவரும் நாடி - நன்று | | முந்து முத்தமிழ் இலக்கி யம்பல | | கண்டு முத்தமிழ் இலக்க ணந்தரப் |
|
| பாண்டியன் பின்னே பஃறுளி மதுரையில் | | பைந்தமிழ்க் கழகமே கண்டான் - விண்ணும் | | பரவிய பெரும்புகழ் கொண்டான் - பின்னர்த் | | திடுதி டும்மென நடுநடுங்கியே | | கிடுகி டும்நிலம் கடல்வி ழுங்கவும் |
|
| கைதவன் இடைக் கழகம் அலைவாயில் | | கண்டான் அதுங்கடல் கொள்ள - இன்று | | காணும் வைகைக் கரை யுள்ள - வட | | மதுரையிற் கடைக்கழகம் வகுத்தனன் | | அதனை யும்முது குடுமி ஒழித்தனன். |
|
| அன்றி ருந்திங்கே ஆரியம் ஈரியல் | | அரசரை யும்பற்றிக் கொண்டு - தமிழ் | | ஆகாது வழிபாட்டிற் கென்று - மிகத் | | தாழ்த்தி வைத்தது தமிழ ரும்அதை | | ஆழ்த்தி விட்டனர் அடிமை யாகியே |
|
| எண்ணரு நூல்கள் இருந்தன தமிழிலே | | எல்லாமே ஆரியஞ் சென்ற - பின்னே | | இறந்தன தமிழிலே மன்ற - எஞ்சி | | இருந்த சொற்பல இழிந்து வழக்கினில் | | இறந்து பட்டன இகழ்ந்து விலக்கவும் |
|
| இறுதி யாய்த்தமிழ் எழுத்தையும் ஒழித்திட | | எண்ணினார் தமிழ்ப்பகை யோரே - நன்றி | | என்னேனும் இல்லாத பேரே - இனித் | | தமிழின வேரறின் தடையொன் றின்றியே | | தனிமை யாரியம் தழையும் என்பதே |
|
| இந்நிலை யறிந்தின்னே தமிழ் மக்கள் | | எல்லாரும் ஒன்றாகச் சேரும் - தமிழ் | | இன்னலே இல்லாது பாரும.் |
|