|
107. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு |
|
'நன்றுடையானை' என்ற மெட்டு |
பண் - குறிஞ்சி தாளம் - இணையொற்று |
1 |
| பற்றொன்று மில்லாப் பற்பலர் கூடிப் பலவாறு | | குற்றங்கள் மல்கக் கொச்சை வெஞ்சொல்லும் இனமல்லா | | மற்றும் பல்வேறும் மட்டின்றிக்கொண்டு தூய்மையைச் | | செற்றது சென்னைத் தமிழகராதி சிறப்பின்றே. |
|
2 |
| பக்கம் ஒவ்வொன்றும் பல்பிழை சேரப் பொதுவாகும் | | மக்கள் பணம்மே மாதொகை வீணிற் செலவிட்டு | | மிக்கதென் சொல்லை வடசொல்லாய்க் காட்டி மிடியுறத் | | தொக்கது சென்னைத் தமிழகராதி துணிவென்னே. |
|
3 |
| ஆண்டுகால் நூ0றும் ஆகியும் பல்தென் சொல்லின்றித் | | தூண்டியும் நன்று தொகுக்காது சொல்லின் பொருளும்மே | | வேண்டிய வாறே வேறாகக் கூறி மயல்கொள்ள | | ஈண்டிய சென்னைத் தமிழகராதி இழிவன்றோ. |
|
4 |
| ஆங்கிலம் முன்னும் அருந்தமிழ் பின்னும் அகராதி | | தேங்கிய தீங்கு தெளிவாகக் காட்டும் திறனாய்வு | | பாங்காய் விடுத்தும் பல்கலை மன்றம் பார்க்காதே | | தூங்கிய சென்னைத் தமிழகராதி தொடரும்மே. |
|
5 |
| புலவர்க்குங் கற்ற பொதுமக்கட் கும்ஆங்கிலக் கல்வி | | வலவர்க்குங் கட்சித் தலைவர்க்குங் கல்வி யமைச்சர்க்கும் | | பலவர்க்கும் ஈது தெரிவித்தும் இன்னும் பல்லாண்டு | | செலவுயக்குஞ் சென்னைத் தமிழகராதி திருந்தாதே. |
|