பக்கம் எண் :

100இசைத்தமிழ்க் கலம்பகம்

4
மாணவரினும் நடைகோணிய ஆசிரிய
    வீணரைத்தான் விலக்கவே - இக்காலத்தும்
     ஆள்நரைத்தான் பொறுத்ததே
5
உள்ளத்தை ஆசான் விற்று வெள்ளப் பொன்பெறலினும்
    கள்ளச்சரக்கை விற்பதும் - நன்றாகுமே
     கொள்ளைத்தனத்தில் நிற்பதும்.
6
பேணுந் தனித்தமிழைப் பேசா திருத்தலோடு
     பேசுவோரையுந் தடுக்கும் - கோளெங்ஙனம்
     பேராசிரியர்க் கடுக்கும்.
112. தனித்தமிழ்ப் பகைவர்
'வதனமோ சந்திர பிம்பமோ' என்ற மெட்டு
ப.
இதுவொரு புதுமையானதே - இழிவு தருவதே
இதுவும் ஓர் புதுமையானதே.
து. ப.
இத்தமிழகத் திருந்தயலார் இதனை எதிர்ப்பதே.
உ.1
முத்தமிழ் மறைமலையடிகள் ஒத்த தமிழும் ஒரு தமிழா
எத்தனை யுமதின் பமுண்டோ என வினவுவதே
(இது)
2
புள்ளொடு பறவையென் றொருசொல்
     பொன்னெனுந் தமிழ்வழக் கிருக்கத்
தள்ளியவற் றைப்பட்சி யெனுஞ்சொல்
     தனைவற் புறுத்தலே
(இது)