பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்101

3
தன்மொழிச் சொல்லைஅயல் பழிக்கத்
     தாங்குவ தில்லைபிற நிலத்தார்
தன்மதிப் பின்றிவிலங் கொத்தவன்
     தமிழன் ஒருவனே
(இது)
4
வாழ்கதமிழ் என்றொரு சொலவும்
     வண்டமிழ்த் திருநாள் விழவும்
தாழ்விலாத் தமிழ்நாட் டுணர்வும்
     தடைசெய்க என்பதே
(இது)
113. தமிழ்ப்பற்றில்லார் தமிழ் வளர்த்தல்
'உசுநத்தேரா கைசநம்கே' என்ற மெட்டு
1
அன்பில்லாதார் மக்களேனும்
     அன்னையைத்தான் காப்பரோ
பண்பில்லாதார் தமிழரேனும் பகைபோல்
     தமிழைத் தீர்ப்பரே
(அன்பி)
2
மறைமலையாம் அடிகள் கூட்டம் மகிழ்ந்து
     தனித்தமிழ் வளர்க்குமே
குறைகொள் வையாபுரிகள் கூட்டம்
    கொடுந்தமிழையும் தளர்க்குமே
(அன்பி)
3
கல்லூரியில் கல்விவாயில் கலவைத்
     தமிழாய்ப் புகுத்தலே
மெல்ல இங்கே இந்திரைவே
    மிகுந்த வழியை வகுத்தலே
(அன்பி)