|
3 |
| தன்மொழிச் சொல்லைஅயல் பழிக்கத் | | தாங்குவ தில்லைபிற நிலத்தார் | | தன்மதிப் பின்றிவிலங் கொத்தவன் | | தமிழன் ஒருவனே (இது) |
|
4 |
| வாழ்கதமிழ் என்றொரு சொலவும் | | வண்டமிழ்த் திருநாள் விழவும் | | தாழ்விலாத் தமிழ்நாட் டுணர்வும் | | தடைசெய்க என்பதே (இது) |
|
113. தமிழ்ப்பற்றில்லார் தமிழ் வளர்த்தல் |
|
'உசுநத்தேரா கைசநம்கே' என்ற மெட்டு |
1 |
| அன்பில்லாதார் மக்களேனும் | | அன்னையைத்தான் காப்பரோ | | பண்பில்லாதார் தமிழரேனும் பகைபோல் | | தமிழைத் தீர்ப்பரே (அன்பி) |
|
2 |
| மறைமலையாம் அடிகள் கூட்டம் மகிழ்ந்து | | தனித்தமிழ் வளர்க்குமே | | குறைகொள் வையாபுரிகள் கூட்டம் | | கொடுந்தமிழையும் தளர்க்குமே (அன்பி) |
|
3 |
| கல்லூரியில் கல்விவாயில் கலவைத் | | தமிழாய்ப் புகுத்தலே | | மெல்ல இங்கே இந்திரைவே | | மிகுந்த வழியை வகுத்தலே (அன்பி) |
|