பக்கம் எண் :

102இசைத்தமிழ்க் கலம்பகம்

4
மும்மொழிகள் கற்கும் நிலைமை
     முத்தமிழ் நாட்டில்லையே
பொம்மலாம் ஆங்கிலமுந் தமிழும்
     போதும்மிகுதி தொல்லையே
(அன்பி)
5
வாழும்நாளே குறுகி மேன்மேல்
     வளருங்கல்வி பெருகுமே
ஆழமாக அறிவியல்கள் அறிதலே நற்கருமமே.
(அன்பி)
114. இந்தியேற்பார்க்குத் தமிழ்ப் பற்றின்மை
பண் - (தேவகாந்தாரி)
தாளம் - இணையொற்று
ப.
இம்மியுந் தமிழன் புண்டோ - இவர்
     ஏனோரை ஏமாற்றல் நன்றோ.
து. ப.
எம்மொழி தமிழைக் கொல்லும் - அவை
     தம்மை இவர்மனம் கொள்ளும் - (இவர்க்கு)
(இம்மி)
உ.1
இந்தியை நல்வர வேற்பார் - அதை
    எதிர்ப்ப வரைஎதி ரேற்பார்
முந்தியே தமிழை மாற்றும் - வட
     மொழியிற் சடங்கெலாம் ஆற்றும்ச- (இவர்க்கு)
(இம்மி)
2
செந்தமி ழின்வர லாறே - ஒரு
     சிறிதும் ஆய்ந்தறியா தாரே
வந்த மொழிகளுள் சீரே - தரும்
     வண்மையாங் கிலம்எள் வாரே - (இவர்க்கு)
(இம்மி)