|
4 |
| மும்மொழிகள் கற்கும் நிலைமை | | முத்தமிழ் நாட்டில்லையே | | பொம்மலாம் ஆங்கிலமுந் தமிழும் | | போதும்மிகுதி தொல்லையே (அன்பி) |
|
5 |
| வாழும்நாளே குறுகி மேன்மேல் | | வளருங்கல்வி பெருகுமே | | ஆழமாக அறிவியல்கள் அறிதலே நற்கருமமே. (அன்பி) |
|
114. இந்தியேற்பார்க்குத் தமிழ்ப் பற்றின்மை |
|
பண் - (தேவகாந்தாரி) தாளம் - இணையொற்று |
ப. |
| இம்மியுந் தமிழன் புண்டோ - இவர் | | ஏனோரை ஏமாற்றல் நன்றோ. |
|
து. ப. |
| எம்மொழி தமிழைக் கொல்லும் - அவை | | தம்மை இவர்மனம் கொள்ளும் - (இவர்க்கு) (இம்மி) |
|
உ.1 |
| இந்தியை நல்வர வேற்பார் - அதை | | எதிர்ப்ப வரைஎதி ரேற்பார் | | முந்தியே தமிழை மாற்றும் - வட | | மொழியிற் சடங்கெலாம் ஆற்றும்ச- (இவர்க்கு) (இம்மி) |
|
2 |
| செந்தமி ழின்வர லாறே - ஒரு | | சிறிதும் ஆய்ந்தறியா தாரே | | வந்த மொழிகளுள் சீரே - தரும் | | வண்மையாங் கிலம்எள் வாரே - (இவர்க்கு) (இம்மி) |
|