|
3 |
| தண்டமிழ்ப் பேரையே தாங்கார் - தனித் | | தமிழறி வோரகம் நோங்கார் | | கொண்டதோர் கொள்கையும் நீங்கார்- பழங் | | குறடுபோ லும்பேதைப் போங்கார் - (இவர்க்கு) (இம்மி) |
|
115. ஆங்கிலத்தை யெதிர்ப்பது தமிழ்ப்பற்றாலன்று |
|
'வெள்ளிப் பிடியறுவாள்' என்ற மெட்டு |
1 |
| ஆங்கிலத்தை யெதிர்ப்ப தெல்லாம் | | ஆரிய இந்தியை ஏற்க | | ஆய்ந்து கண்டமுடிபதுவே அன்னைத் | | தமிழையுந் தீர்க்க. |
|
2 |
| ஆங்கிலமே இந்திபொது ஆகத்தடை யானமலை | | நீங்கினதும் அதனிடத்தில் நேரேவரும் இந்தியலை. |
|
3 |
| ஆட்சியுடன் கல்விதமிழ் ஆகவேண்டு | | மின்றே யென்பார் | | மாட்சிமிகும் அவர் தமிழோ | | மாறுவடம் முக்காற் பங்காம். |
|
4 |
| ஆங்கிலமும் வரலாறும் அருந்தமிழும் கல்லாமாந்தர் | | ஓங்கியுள்ள நிலைமை நீட உற்ற | | தடை ஒன்றும் வேண்டார். |
|
5 |
| ஆங்கிலத்தை எதிர்ப்ப வர்க்கே | | அந்தமிழிற் பற்றே யில்லை | | ஈங்கெவரும் மாறு கொண்டால் | | இன்றிலவு காத்த கிள்ளை. |
|