பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்107

3
ஆயனில் லாமந்தை அங்கலாய் கடமாம்
அருந்தமிழ் நாடெங்கும் அடிமைசேர் மடமாம்
தேயுந் தமிழ்நாடும் திறந்துள்ள மடமாம்
திசையெட் டாரும்வந்து சேரவே இடமாம்.
4
பணத்தைச் சுருட்டுவார் பழகிய தலைவர்
பதவியோடு பட்டம் பெறுவாரே சிலவர்
கனத்தைப் புகழோடு கருதுவார் புலவர்
கழகத்தால் வணிகத்தைப் பெருக்குவார் வலவர்
5
மறைமலை யடிகளும் மாண்டனர் முன்னே
மறைந்தார் பன்னீர்ச்செல்வம் முந்நீரிற் பின்னே
இறைவனே தமிழர்க்குத் தலைவனாம் இன்னே
இறைஞ்சி வணங்குக அவனடி மன்னே.
120. தமிழர் பின்பற்றவேண்டிய தலைவர் இருவர்
பண் - செஞ்சுருட்டி
தாளம் - முன்னை
ப.
எந்தக் கட்சியிலேநீ யிருந்தாலும் - என்றும்
முந்திப்பற்றும் தலைவர் வள்ளுவரே.
து. ப.
பிந்தித் தலைவர் மறைமலை யடிகள் - பிறர்
     சொந்தப் பெருநலமே கொள்ளுவரே
(எந்தக்)
உ.
வாழ்வினில் அனைவரும் உயர்வடையத் - திரு
     வள்ளுவர் வகுத்தனர் நல்வழியே
தாழ்வற மறைமலை யடிகள் பின்னே - மிகத்
     தந்தனர் தனித்தமிழ் இன்மொழியே
(எந்தக்)