|
3 |
| ஆயனில் லாமந்தை அங்கலாய் கடமாம் | | அருந்தமிழ் நாடெங்கும் அடிமைசேர் மடமாம் | | தேயுந் தமிழ்நாடும் திறந்துள்ள மடமாம் | | திசையெட் டாரும்வந்து சேரவே இடமாம். |
|
4 |
| பணத்தைச் சுருட்டுவார் பழகிய தலைவர் | | பதவியோடு பட்டம் பெறுவாரே சிலவர் | | கனத்தைப் புகழோடு கருதுவார் புலவர் | | கழகத்தால் வணிகத்தைப் பெருக்குவார் வலவர் |
|
5 |
| மறைமலை யடிகளும் மாண்டனர் முன்னே | | மறைந்தார் பன்னீர்ச்செல்வம் முந்நீரிற் பின்னே | | இறைவனே தமிழர்க்குத் தலைவனாம் இன்னே | | இறைஞ்சி வணங்குக அவனடி மன்னே. |
|
120. தமிழர் பின்பற்றவேண்டிய தலைவர் இருவர் |
|
பண் - செஞ்சுருட்டி தாளம் - முன்னை |
ப. |
| எந்தக் கட்சியிலேநீ யிருந்தாலும் - என்றும் | | முந்திப்பற்றும் தலைவர் வள்ளுவரே. |
|
து. ப. |
| பிந்தித் தலைவர் மறைமலை யடிகள் - பிறர் | | சொந்தப் பெருநலமே கொள்ளுவரே (எந்தக்) |
|
உ. |
| வாழ்வினில் அனைவரும் உயர்வடையத் - திரு | | வள்ளுவர் வகுத்தனர் நல்வழியே | | தாழ்வற மறைமலை யடிகள் பின்னே - மிகத் | | தந்தனர் தனித்தமிழ் இன்மொழியே (எந்தக்) |
|