பக்கம் எண் :

108இசைத்தமிழ்க் கலம்பகம்

121. இந்நாட்டிற்கு இந்நிலையில் முன்னேற்றமின்மை
'பரமானந்த மெய்ப்பரங் குன்றோன்' என்ற மெட்டு
ப.
முன்னேற்றமே இந்நாட்டிற் கில்லை - முட்டுக் கட்டையாய்
முதிரும் உட்பகையாலே தொல்லை - முற்றும்நீங் காக்கால்
து. ப.
முதுதமிழ் வழிமறித் திட்டனர் கல்லை
    முதல்வனைத் தொழவட மொழிதமிழ் எல்லை
முதிர்தரும் இன்னிசை தெலுங்கெனும் சொல்லை
     மொழியவே யிழிந்தது முத்தமிழ் நெல்லை
(முன்)
பல்லவி உருவடித் தொடர்
இந்நாள் பல்வகைத் தமிழ்ப்பகைவர் - எல்லாருங்கூடி
இந்தியே இந்திய வொன்றியங்
        கொண்டிடும் மொழியாம் - அதையறியார்
இன்றேப யின்றேவி ரைந்தேய றிந்தால்
     நல் விழியாம் - இன்றே பொதுவாய்
ஈங்கினிதாளும் ஆங்கிலமொழியும் நீங்கிடின் இந்தி
    ஓங்கிவளர்ந்திட வழியாம் - என்றேயுளறி
ஆரியம் அரபியொடு பாரசீகம் எனுமூன்றில்
தேறிய தலைப்புலவர் தில்லியில் மானியம்பெறப்
பாரியாக வடமொழிப் பல்கலைக் கழகங்காண
வாரியே குடியிறையை வழங்கியிறை யிந்நிலை
(முன்)
122. இந்திய ஆரிய ஏமாற்று
'ப்ரோவ சமைய' என்ற மெட்டு
ப.
எந்த நாளுமே ஏமாறும் நாளோ.
து. ப.
அந்த நாளிற்போலே அறவன் பேராலே
    இந்த நாளும்மேலே எழுந்து செல்காலே
(எந்த)