பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்109

உ.
தென்சொல் மூலமெல்லாம் தேரும் வடசொல்லாம்
    திருக்குறள் நூலும் திரிவர்க்கப் பாலாம்
பண்கொள்ளுந் தென்நடமும் பரதநாட் டியமாம்
     பகர்தொல் காப்பியமும் பாணினீய வயமாம்
(எந்த)
123. இதுவும் அது
'மாதர்பிறைக் கண்ணி யானை' என்ற மெட்டுவகை
ப.
நீல நரிக்கதை போலும் - வட
     நூலவர் செய்கையக் காலம்.
து. ப.
வாலிய நிறத்தின் மேலும் - பொலி
    வல்லோசை மொழியி னாலும்
(நீல)
உ.
மாலை நரியூளை கொண்டே - மற்ற
    மாவினம் தெளிந்த அன்றே
மேலை யாரியமுங் கண்டே - தமிழ்
    மெய்யறிய வில்லை இன்றே
(நீல)
124. ஏமாறல்
(இசைந்த மெட்டிற் பாடுக.)
1
ஏமாறி யில்லாதோர் ஏமாற்றி யில்லை
    ஏற்பாரே யில்லாத தொன்றீவாருமில்லை
ஏமாளிக்கும் ஒன்றே ஏமாறும் எல்லை
    ஏன் மேலும் தமிழன்தான் ஏமாறித்தொல்லை.