|
உ. |
| தென்சொல் மூலமெல்லாம் தேரும் வடசொல்லாம் | | திருக்குறள் நூலும் திரிவர்க்கப் பாலாம் | | பண்கொள்ளுந் தென்நடமும் பரதநாட் டியமாம் | | பகர்தொல் காப்பியமும் பாணினீய வயமாம் (எந்த) |
|
123. இதுவும் அது |
|
'மாதர்பிறைக் கண்ணி யானை' என்ற மெட்டுவகை |
ப. |
| நீல நரிக்கதை போலும் - வட | | நூலவர் செய்கையக் காலம். |
|
து. ப. |
| வாலிய நிறத்தின் மேலும் - பொலி | | வல்லோசை மொழியி னாலும் (நீல) |
|
உ. |
| மாலை நரியூளை கொண்டே - மற்ற | | மாவினம் தெளிந்த அன்றே | | மேலை யாரியமுங் கண்டே - தமிழ் | | மெய்யறிய வில்லை இன்றே (நீல) |
|
124. ஏமாறல் |
|
(இசைந்த மெட்டிற் பாடுக.) |
1 |
| ஏமாறி யில்லாதோர் ஏமாற்றி யில்லை | | ஏற்பாரே யில்லாத தொன்றீவாருமில்லை | | ஏமாளிக்கும் ஒன்றே ஏமாறும் எல்லை | | ஏன் மேலும் தமிழன்தான் ஏமாறித்தொல்லை. |
|