பக்கம் எண் :

110இசைத்தமிழ்க் கலம்பகம்

2
தாமாகக் கையூட்டுத் தந்தாலும் குற்றம்
     ஏமாற்றின் மேன்மேலும் ஏமாறல் குற்றம்
ஏமாற்றொன் றாலேயே இறுப்பாரின் அற்றம்
     எல்லாம் வல்லானன்றி எவராலே முற்றும்.
125. தமிழ் வளர்ச்சிக்குத் தகுந்த நிலையின்மை
'தியானமே வரமைன' என்ற மெட்டு
பண் - (தன்னியாசி)
தாளம் - முன்னை
ப.
ஏதுமே இடமில்லை இங்கே இன்றமிழ் வளர (இன்னும்)
து. ப.
தீதும் நன்றும் தெரியாத் தமிழ மாந்தர்
     தேரின் நூற்றெண்பான் திகைதற் குறியானால்
(ஏதுமே)
உ.
காதுறும் பாடல் கலவை யரங்கு
     கடவுள் வணக்கமும் வடமொழிப் பங்கு
ஓதுங்கலை ஆட்சியும் ஒன்றுமேல் இந்தி
     உள்ள தமிழும் ஒழிந்தேபோகும் பிந்தி
(ஏதுமே)
126. தமிழன் அடிமைத்தனம்
'மாடுமேய்க்கும் கண்ணே' என்ற மெட்டு
ப.
தமிழன் இந்த நாளும் - ஏன்
     தாழ்ந்து நின்றான் கேளும்.
உ.1
வெள்ளையனை விரட்டி விட்டோம்
     விடுதலையும் வந்ததென்று