|
| சொல்லி முன்னை யடிமைத்தனம் | | சுமந்துவர முன்போ லின்று ( தமிழன்) |
|
2 |
| சோறெனுஞ்சொல் அழகான தூயதமி ழாயிருக்க | | மாறியதைச் சாதமென்று மானமின்றி வழங்கி நிற்கும் (தமிழன்) |
|
3 |
| சேயசிவன் திருமாலே செந்தமிழ வழியேனும் | | கோயில் வழிபாடு முற்றும்கூற வடமொழி காணும் (தமிழன்) |
|
4 |
| நாட்டுமொழி இந்தியினி வீட்டுமொழி தமிழெனவே | | கேட்டுவழி நின்றுமதி கெட்டுரைத்தான் தமிழனுமே (தமிழன்) |
|
5 |
| தூயமரக் கறியுணவே துய்க்குமுயர் தமிழன்அன்னே | | தீயனெனச் சமையற்பணித் திறமொருசார் இழந்ததென்னே (தமிழன்) |
|
6 |
| பிள்ளையாரைப் பிடித்ததுன்பம் பின்னரசைப் பிடித்ததைப்போல் | | வெள்ளைமனத் தமிழன்நிலை விழுத்தமிழைப் பிடித்ததப்பால் (தமிழன்) |
|
7 |
| சீர்த்ததிருச் செந்தமிழில் சிவனுமிட்டான் கையெழுத்தே | | சாத்துகின்றார் சங்கிருதம் தம்பிரான்மார் தலையெழுத்தே (தமிழன்) |
|
127. தனித்தமிழ்ப் புலவர்க்குத் தாங்கலின்மை |
|
'பொருளே யில்லார்க்குத் தொல்லையா' என்ற மெட்டு |
ப. |
| தமிழ்நா டெனவொன் றில்லையா - அதில் | | தமிழர் இல்லையா - தனித் | | தமிழைப்பேணும் புலவர்க்கேஒரு தாங்கல் இல்லையா. |
|