பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்111

சொல்லி முன்னை யடிமைத்தனம்
    சுமந்துவர முன்போ லின்று
( தமிழன்)
2
சோறெனுஞ்சொல் அழகான தூயதமி ழாயிருக்க
    மாறியதைச் சாதமென்று மானமின்றி வழங்கி நிற்கும்
(தமிழன்)
3
சேயசிவன் திருமாலே செந்தமிழ வழியேனும்
    கோயில் வழிபாடு முற்றும்கூற வடமொழி காணும்
(தமிழன்)
4
நாட்டுமொழி இந்தியினி வீட்டுமொழி தமிழெனவே
    கேட்டுவழி நின்றுமதி கெட்டுரைத்தான் தமிழனுமே
(தமிழன்)
5
தூயமரக் கறியுணவே துய்க்குமுயர் தமிழன்அன்னே
    தீயனெனச் சமையற்பணித் திறமொருசார் இழந்ததென்னே
(தமிழன்)
6
பிள்ளையாரைப் பிடித்ததுன்பம் பின்னரசைப் பிடித்ததைப்போல்
    வெள்ளைமனத் தமிழன்நிலை விழுத்தமிழைப் பிடித்ததப்பால்
(தமிழன்)
7
சீர்த்ததிருச் செந்தமிழில் சிவனுமிட்டான் கையெழுத்தே
    சாத்துகின்றார் சங்கிருதம் தம்பிரான்மார் தலையெழுத்தே
(தமிழன்)
127. தனித்தமிழ்ப் புலவர்க்குத் தாங்கலின்மை
'பொருளே யில்லார்க்குத் தொல்லையா' என்ற மெட்டு
ப.
தமிழ்நா டெனவொன் றில்லையா - அதில்
    தமிழர் இல்லையா - தனித்
    தமிழைப்பேணும் புலவர்க்கேஒரு தாங்கல் இல்லையா.