பக்கம் எண் :

112இசைத்தமிழ்க் கலம்பகம்

உ.1
குமரிநாட்டில் தமிழொன்றே முன்குலவ வில்லையா
     இன்றும் - நிலவ வில்லையா
தமிழ்நாடென்னும் பேரைச் சொல்லவும்
    தாங்காத் தொல்லையா
இந்தத் - தமிழன் எந்நாள் அடைவானோ
    விடுதலைதான் சொல்லையா
(தமிழ்)
2
சிவனும் மாலும் தமிழர் தெய்வம் தெரிய வில்லையா
    ஆய்வும் - புரிய வில்லையா
செயற்கை மொழியில் வழிபடுவதைத்
    தீர்த்தல் தொல்லையா
இந்தச் சிறுமைத் தமிழன் மயலும் எந்நாள் தெளியும் சொல்லையா
(தமிழ்)
3
இந்தியாலே என்ன நன்மை எண்ண வில்லையா
    மனத் - திண்மை யில்லையா
இலக்கியநலம் இல்லாமொழியை விலக்கல் தொல்லையா
    இந்த - எளிமைத் தமிழன் வலிமை
எந்நாள் எய்தும் சொல்லையா
(தமிழ்)
4
தேயவொற்றுமை ஆங்கிலத்தால் திகழ வில்லையா
    நாமும் - புகழ வில்லையா
தேவநாகரி வேண்டாவென்று தெரித்தல் தொல்லையா
    இந்தத் - தீங்கெல்லாம் இந்நாட்டில் எந்நாள்
    நீங்கும் சொல்லையா
(தமிழ்)
128. தமிழன் பேதைமை
'கண்டதுண்டோ கலியுகத்தில்' என்ற மெட்டு
ப.
ஏதமேகொண் டூதியத்தை இழப்பதே யன்னோ - பெரும்
பேதைமையென் றேபுலவர் பெருமகன் சொன்னான்.