பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்113

து. ப.
ஏதிலரை நம்பி இந்த ஏழைத் தமிழன்றான் - இன்னும்
     ஏதும் அறிவே யில்லாமல் இடரில் அமிழ்கின்றான்
(ஏதமே)
(உரைப்பாட்டு)
இனிதான தேங்கதலி யிருக்கவும் அதைவிட்டே
    எட்டிக் கனிபறித்துண் டிறப்பதுபோல்
கனிவான செந்தமிழும் கண்திறந்த ஆங்கிலமும்
    கற்காமல் இந்தியைக்கற் றுழப்பதுவே
(ஏதமே)
129. தமிழன் பேதைமை
'கத்தன வாரிகி' என்ற மெட்டு
பண் - (தோடி)
தாளம் - முன்னை
ப.
எத்தனை சொன்னாலும் எட்டுணையேனுந் தெரியவில்லை
    பித்தமோ தமிழனுக்கே பேதைமையோ பேய்க்கோளோ
(எத்தனை)
து. ப.
முத்தமிழ் நாகரிகம் முத்தைநாள் குமரிகண்ட
    சித்தர்பின் னோரிது கேடுற ஏவர் சாவிப்போ (எத்தனை)
அ.
எத்துகையே மேற்கொண்டார் இத்தமிழ் நாடுதான் வந்து
    புத்தேளிர் மரபென்று போற்றவே தம்மை
மெத்தெனும் ஒலிமிஞ்சும் நற்றமிழைக் கோவில் நீக்கிப்
    பொற்றா மரைக்குள மன்றமும் போக ஆரியங் கொண்டான்
(எத்தனை)