பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்131

2
பிறப்போடு தொடர்புள்ள பேய்க்குலப் பிரிவினை
சிறப்பாக வுள்ளஇந்தச் சிறுமைமிகும் இந்திய தேயம்
      சீருமுரிமை மாயும்
      சேரும் அடிமை நோயும்
                    செவ்வனே ஆயும்.
(குடி)
3
குலவகுப் பில்லாததோர் குமுகாயம் வகுப்பதெம்
கொள்கையென்ற பேராயம் குலவழியிலே இன்றுசெல்லும்
             குறித்த தேர்தல் வெல்லும்
             கொடுவலிமை புல்லும்
             குணமோ சொல்லும்.
(குடி)
154. இந்தியக் குடியரசு
'நீலாற்றின் தீரத்திலே' என்ற மெட்டு
ப.
இந்தியாவிற் குடியரசும் எந்தமுறை நடப்பதென்றே
ஏனைய நாட்டுள்ளவர்க்கே எள்ளளவுத் தெரியாது.
து. ப.
சொந்தமொழி நூற்றிற்குத் தொண்ணூறு கல்லாமை
சொல்லளவாங் குலப்பிரிவு கொள்ளுங்குடியர சேது.
(இந்தி)
2
தாய்மொழியிற் கையெழுத்தும் தாமாக இடத்தெரியாத்
தற்குறியும் சட்டவவை பாராளு மன்றனையும்
ஆய்பொருளும் அங்கியலும் அனைத்துமறி யாதுதலை
ஆட்டிக்கொண்டே கருத்தெடுக்கும் அன்று
தூக்குங் கையிணையும். (இந்தி)
உ.1
வேட்பாளர் தகுதியையும் விரும்பியுற்ற கட்சியையும்
விழித்தறியார் குடவோலையர் வெள்ளைகுலம் வென்றாடும்
காட்டும் தேர்தல் சாவடியில் காண்பர் தேசப்படம் தம்பேரைக்
கண்டதிற் குத்மேசையிட் டுக்கையிலும் பின் கொண்டோடுவர்.
(இந்தி)