|
155. இந்தியாவின் ஈரியல் |
|
'சோதிக்கலாபமயில் மீது நடனமிடு' என்ற மெட்டு |
பண் - (தோடி) தாளம் - முன்னை |
ப. |
| ஆரியத் தமிழ்என ஈரியலுண்மை யிங்கே | | அறிகவே பகுத்தரசே. |
|
து. ப. |
| நீருடன் நெய்யா யொன்று சேரினுமே யிரண்டு | | நேரியமுறை கண்டார் நெறியின் நாவுக்கரசே (ஆரியத்) |
|
உ.1 |
| ஆரியர் வருமுன்னே சீரிய நாகரிகம் | | அமைந்தது தமிழகமே | | சேரியல் மிகையெல்லாம் ஆரிய மறையவர் | | நேரியல் தெய்வமென்று நிவந்து புகழ்முகமே. (ஆரியத்) |
|
2 |
| வாழ்த்து வணக்கங்கல்வி பேச்சு வழக்காறிசை தோற்ற முணவும் வேற்றுமை | | தாழ்த்திமுன் தமிழைப்பின் வீழ்த்தவும் வருமொரு | | பாழ்த்த மொழிமேல் தமிழ்ச் சீற்றம் பறைசாற்றுமே. |
|
|
156. கல்லாமையும் குலப்பிரிவும் கட்டாய இந்தியும் உள்ளவரை இந்தியாவிற்கு விடுதலையின்மை |
|
நொண்டிச் சிந்து |
1 |
| திட்டம் வகுப்போரே - உமக்குத் | | தெரியவேண்டிய செய்தித்திறங் கேளும் |
|
2 |
| எந்த நாடேனும் - என்றும் | | ஏற்றமுறக் கல்லாமையைத் தீர்த்திடவேண்டும் |
|