பக்கம் எண் :

132இசைத்தமிழ்க் கலம்பகம்

155. இந்தியாவின் ஈரியல்
'சோதிக்கலாபமயில் மீது நடனமிடு' என்ற மெட்டு
பண் - (தோடி)
தாளம் - முன்னை
ப.
ஆரியத் தமிழ்என ஈரியலுண்மை யிங்கே
    அறிகவே பகுத்தரசே.
து. ப.
நீருடன் நெய்யா யொன்று சேரினுமே யிரண்டு
     நேரியமுறை கண்டார் நெறியின் நாவுக்கரசே (ஆரியத்)
உ.1
ஆரியர் வருமுன்னே சீரிய நாகரிகம்
    அமைந்தது தமிழகமே
சேரியல் மிகையெல்லாம் ஆரிய மறையவர்
    நேரியல் தெய்வமென்று நிவந்து புகழ்முகமே. (ஆரியத்)
2
வாழ்த்து வணக்கங்கல்வி பேச்சு வழக்காறிசை தோற்ற முணவும் வேற்றுமை
தாழ்த்திமுன் தமிழைப்பின் வீழ்த்தவும் வருமொரு
    பாழ்த்த மொழிமேல் தமிழ்ச் சீற்றம் பறைசாற்றுமே.
 
156. கல்லாமையும் குலப்பிரிவும் கட்டாய இந்தியும் உள்ளவரை இந்தியாவிற்கு விடுதலையின்மை
நொண்டிச் சிந்து
1
திட்டம் வகுப்போரே - உமக்குத்
தெரியவேண்டிய செய்தித்திறங் கேளும்
2
எந்த நாடேனும் - என்றும்
ஏற்றமுறக் கல்லாமையைத் தீர்த்திடவேண்டும்