பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்145

2
உலகமுள்ள அளவும் இங்கே ஒருகட்சியின் ஆட்சியே
நிலைநிறுத்தப் பலகொடுமை நிகழ்த்துவது மாட்சியோ.
3
சிறுபதவி விட்டுவிட்டுப் பெரும்பதவி தாங்குதல்
சிறந்ததோதன் னலவிழப்போ செப்பும்உண்மை ஓங்கவே
4
ஆங்கிலத்தை ஆட்சிமொழி யாக்கி யிந்தி நீக்குக
அணிகலப்பொன் தூயதாக்கி அதிக வரியை மாற்றுக.
5
இந்தியாலே தமிழ்கெடுதல் இலங்கும் அங்கை நெல்லியே
மந்திரியாம் பதவிநோக்கி மக்கள் தாயைக் கொல்வதோ!
6
பணத்தினாலும் பதவியாலும் பற்றுங்குலத்தி னாலுமே
இணக்கியெல் லாத்தமிழரையும் என்றும் ஏய்க்க ஏலுமோ?
7
நேர்மையுடன் பொதுநலத்தை நேர்ந்தேயரசு செய்பவர்
தேர்தலுக்கு முன்பதவி தீர்த்து முயற்சி செய்கவே
8
குடியரசின் பெயரைக்கொண்டு கொடுங்கோ லாட்சி செய்பவர்
அடியோடழியு மாறிறைவன் அருளும் நிறையப் பெய்யுமே!
 
172. தமிழ்ப் புலவர் வாய்ப்பூட்டு
1
மொழியென்னும் துறையாளும் அதிகாரி புலவோனே
முடையின்றி மனைவாழ்வு நடையாக வுரியோனே
இழிவுண்டு பழிமேலும் அழிவேதன் மொழிக்காயின்
எதிர்நின்று போராடி ஈடேற்றக் கடவோனே.