|
3 |
| உரிமையெல்லாம் இழந்தால் - பின் | | உலக வாழ்க்கையும் எதற்கே | | உரிமை யென்றே அடிமைத் தனத்தை | | உரைத்தால் உரிமை யாகாது | | இருமொழியாம் கொள்கையிங்கே | | என்றும் நிலவுகவே | | இருமொழியும் தேர்ச்சி பெற்றால் | | எங்கும் அதுபோதும். (இருப்ப) |
|
170. தமிழ்நாட்டு மந்திரிமார் தமிழைக் காட்டிக் கொடுத்தல் |
|
'உங்கள் பொன்னான கைகள்' என்ற மெட்டு |
| இரு கண்ணான தமிழை மண்ணாளப் பெறினும் காட்டிக் கொடுக்க லாமா | | எண்ணமும் வருமோ எவ்வாறு தானோ | | விண்ணோரும் விரும்பும் பண்ணாருந் தமிழைக் | | கல்லாத பெயரேநீர் | | தாயாம் செந்தமிழே நோயாம் இந்தியினால் | | மாயாதென் றுளறுகின்றீர் | | கீழான அடிமைக் காளாகும் மந்திரி | | வாழ்வும் ஒருவாழ்வோ - தமிழ் | | நாடு பாழ்படக் கேடு சூழ்கிறீர் | | ஈதோ விடுதலைதான் (இரு) |
|
171. காமராசர் திட்டம் |
|
'தேரத்திலே தில்குசத்தா' என்ற மெட்டு வகை1 | | தலையணையைத் திருப்பிப் போட்டால் தலைவலிதான் தீருமா? | | தலைமையில்லார் பதவி மாறின் தாறுமாறு மாறுமா? |
| | |