|
2 |
| பஞ்சையராய் என்மக்கள் - முற்றும் | | பண்டை நூலை யிழந்தார் | | எஞ்சியுள்ள நிலையும் - இனி | | இந்தியாற் போம்அழிந்தே. |
|
3 |
| தஞ்சமே யாருமில்லை - இன்று | | தன்னவரும் பகையே | | அஞ்சும் ஒடுங்கியினி - என்றும் | | அடிமையாகும் வகையே. |
|
169. தமிழன் உடமை தமிழ் ஒன்றே |
|
'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்' என்ற மெட்டு |
1 |
| இருப்ப தெல்லாம் தமிழனுக்கே | | இன்பத் தமிழொன்றே | | இனியதையும் இழந்துவிட்டால் | | இங்கே வாழ்வில்லை | | பொருத்தமுறும் தாய்க்கொலையும் | | புரிக என்றுரைத்தால் | | பொதுமதியால் அவ்வுரையின் | | புன்மை அறிந்திடுவீர். (இருப்ப) |
|
2 |
| தன்வீட்டுள்ள நெருப்பும் - மிகத் | | தப்பாமற் சுடும்தொடினே | | தன்னாட் டுளதே யென்றோர் கட்சி | | தழுவின் தீயது தீங்காகும் | | பின்னாட்கே அதுதெரிந்தால் | | பிரிந்தே விடவேண்டும் | | தன்கேட்டைத் தான்தேடின் | | தடுப்பார் யாருமில்லை. (இருப்ப) |
|