பக்கம் எண் :

142இசைத்தமிழ்க் கலம்பகம்

2
கோடிக் கணக்கிலே - பொருள்
குவித்து வைத்தவர்
நாடிக் கேட்டபின் - மிக
நழுவி விட்டனர்
(ஏழை)
3
இலக்கக் கணக்கிலே - பொருள்
ஈட்டி வைத்தவர்
கலக்க விரித்திரு - கையும்
காட்டி விட்டனர்
(ஏழை)
4
பள்ளி மாணவர் - தரும்
பத்துச் சல்லியும்
மெள்ள வாங்கியென் - பழ
மேன்மை வெளியிட்டேன்
(ஏழை)
5
என்னை யிங்ஙனம் - மிக
ஏளனம் செய்தும்
அன்னை என்றனர் - இவர்க்
கறிவு நாணின்றோ
(ஏழை)
168. தமிழன்னை புலம்பல்
'உள்ளம் உருகுதையா' என்ற மெட்டு
1
நெஞ்சம் வெடிக்கிறதே - உயிர்
நீங்கத் துடிக்கிறதே
நஞ்ச மனத்தாரோடே - என்றன்
நாடின்று வல்லக்காடே.