பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்141

உ. 1
என்னருமை மைந்தரே என்பகையொடு கூடி
என்பெயர் இயல்நாடும் இயம்பல் தடுத்தா ரென்றே.
(கண்)
2
அறுப்பவனையே நம்பும் ஆடுகள்போல் என்மகார்
ஆரியரொடு கூடி அழிவுறுகின்றா ரென்றே
(கண்)
3
பாரில் முதல்மொழியாய்ப் பலகிளை பெற்ற என்றன்
சீரிய வரலாற்றைச் சிதைக்கத் துணிந்தா ரென்றே
(கண்)
4
என்னுயி ருள்ளவரை என்மகார் கண்திறக்கும்
இந்நிலை கண்டென்னையும் எண்ணினார் கொல்லவென்றே
(கண்)
5
முன்னே மதுரையிலும் பின்னேமா சென்னையிலும்
அண்ணா மலைநகரும் என்னைத் தள்ளினார் என்றே.
(கண்)
167. தமிழ்த்தாய் புலம்பல்
(இசைந்த துயரச்சுவை மெட்டிற் பாடுக)
ப.
ஏழை யாயினேன் - மிக
     ஏழை யாயினேன்.
து. ப.
கீழை மொழியுள்ளும் - மிகக்
கீழை மேயினேன்
(ஏழை)
உ. 1
பேழைக் கணக்கிலே - பொருள்
பேணி வைத்தஎன்
மாழை மக்களும் - எனை
மறுகில் விட்டனர்
(ஏழை)