|
4 |
| சீயென்று தள்ளிய நாயும் - உயிர் | | செல்லும்போ தும்நல்ல செம்மையே தோயும் | | நேயம்வே ளாண்மையும் வாயும் - நடு | | நேர்மை யுடன்மானம் சீர்மையும் வேயும் (பண்) |
|
165. தமிழ்த்தாய் விலங்குச்சிறை |
|
'மன்மத லீலையை வென்றார்' என்ற மெட்டு |
ப. |
| இங்ஙனம் கொடுமை வேறெங்கே கண்டோம் | | இங்கே தமிழ்க் கென்னென்ன பாடுகள். (இங்) |
|
து. ப. |
| சொந்த நன்மனை தமிழ்சூழ மக்கள் காண | | வந்தபுன் மொழிகளே வாழத்தளை பூண (இங்) |
|
உ. |
| இந்தியா வில்முனம் வாணிகஞ் செய்ய | | வந்த ஆங்கிலேயரால் - அவர் | | இன்மொழி யாட்சியால் செங்கோலின் மாட்சியால் | | பின்னே நேர்மைக் கட்சியால் | | அந்தமிழ் தூயதாய் ஆக்கிய மறைமலை | | அடிகள் தனித்தொண்டினால் | | அறவுமே தளர்ந்தே ஆங்கிலர் நீங்கவும் | | அழுந்தும் கைகால் விலங்கே தமிழ்க்கே (இங்) |
|
166. தமிழ்த்தாய் அழுகை |
|
பண் - (சாருகேசி) தாளம் - முன்னை |
ப. |
| கண்ணீர்விட்டுக் கதறி அழுதாள் - இரு | | கன்னமும் வீங்கித் தமிழ் அன்னையே விம்மி விம்மி(க்) (கண்) |
|