பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்151

து. ப.
செந்தமிழ் வரலாறு தெரியாது மந்தையாடுகள் போன்றார் தென்னாடர்
     தெருவில் விளக்கை
     நிறுவ நின்றால்
     குருடர் கருத்தை
     அறிதல் உண்டோ.
(இந்தி)
உ.1
தண்டமிழ்ப் பகைவராய்த் தலைமைப் பதவி தாங்கும்
தறிதலைகள் கருத்தைத் தடைப்படுக்க
வண்டமிழ்ப் புலவரின் மாநாடு கண்டதன் முடிவினைக் கடைப்பிடிக்க
     பகைவன் பெரிய
     புலவன் எனினும்
     மொழியின் உரிமை
     சிறுதும் உறுமோ
(இந்தி)
179. தேவநாகரியால் தேசவொற்றுமைக் கிடமின்மை
'கண்ணே பாப்பா மிட்டாயி வாங்கித்தருவேன்' என்ற மெட்டு
ப.
இந்து தேச மெல்லாம் ஒன்றாமோ
    தேவ நாகரியால்.
(இந்து)
உ.1
ஏன் இந்த மாற்றம் இனும் ஏமாற்றம்
    இருக்கும் மாற்றத்துடன்
(இந்து)
2
எத்தனை வகையோ இந்திய மக்கள்
    இனமே வேறாகும்
(இந்து)