பக்கம் எண் :

158இசைத்தமிழ்க் கலம்பகம்

187. இந்தி வடமொழியால் தேயவொற்றுமைக் கிடமின்மை
1
பேசுமொழி யொன்றெனவே ஆகி விடினே - உடனே
பேசுமிடம் ஒற்றுமையாய்ப் போய்விடு மென்பார்
நேசமாகப் பன்மொழியார் பாரில் இல்லையோ - போரும்
நேரிடத்தொரே மொழியார் மாய்வதில்லை யோ.
2
கேழ்வரகில் நெய்யொழுகும் என்று கிளந்தால் - அதைக்
கேட்பவர்க்குக் கொஞ்சமேனும் மதியில்லையா
வாழ்வரசில் ஒற்றுமைக்கு வடமொழியோ - எரி
வன்னெருப்பை அணைத்தற்கு எண்ணெய் வழியோ
3
ஆரியத்தால் வந்ததமிழ்க் கேடுகளையே - இன்று
அளவிட்டுச் சொல்ல எவராலே முடியும்
சேரிடத்தைத் தானறிந்து செம்மையுறாமல் - நாம்
சிறுமையுற்றோம் இதென்று தீரவிடியும்.
4
ஒற்றுமையே உரமென்ப துண்மையா னாலும் - எங்கும்
ஒரேயளவாக எல்லாம் ஒன்றுபடுமோ
பெற்றவயி றொன்றில்உடன் பிறந்தவரும் - வேறு
பிரிகின்றாரே மணத்தின் பின்னர் இடமே.
5
தாயும் பிள்ளையுமானாலும் தன்னலத்திலே - அவர்
வாயும் வயிறும் வேறென்று தாம்அறையுமே
தேயமதிலுள்ள பற்றுத் தேயுமென்றாலும் - என்றும்
தாய்மொழியிலுள்ள பற்றுத்தான் குறையுமோ
6
வலியச் சண்டையிடுதல் வகை கெட்டது - மேலும்
வந்த சண்டை விடுவதும் வகை கெட்டது
நலியத்தான் வரும் இந்தி நாகரியையே - இந்த
நாட்டை விட்டுத் துரத்துதல் நன்மையுற்றதே.