|
2 |
| மறைமலை யடிகளின் உரைவழி படியும் | | மாண்புறு தமிழன்எப் படியும் | | இறைபெறா அவையில் ஏதிலர் முடிபும் | | எம்மவர் கொள எங்ஙன் முடியும் (இந்தி) |
|
3 |
| பொன்னுடன் இரும்பெதும் பொருந்துவ தில்லை | | பொருந்துமோ வடமுந்தென் எல்லை | | தென்னில மருங்கில் தெளிதமிழ் முல்லை | | திருந்திடா மொழிவரல் தொல்லை. (இந்தி) |
|
4 |
| நெருப்பையே அணைத்திட நெய்யிடார் நிலமே | | திகழ்வதால் தெளிந்திடல் புலமே | | இருக்கும் ஒற்றுமையும் ஈந்ததாங் கிலமே | | இனிஇந் திவரின் அதும் இலமே (இந்தி) |
|
186. இருமொழிக் கொள்கை |
|
'சுகுணமுலே செப்பு கொம்டி' என்ற மெட்டு |
பண் - (சக்கரவாகம்) தாளம் - ஈரொற்று |
| இருமொழிக் கொள்கையே நன்று | | இன்றமிழ் நிலமென்றும் (இரு) |
|
து. ப. |
| ஒருவழியும் தமிழருக்கே | | உதவாக்கடை இந்தியன்றோ (இரு) |
|
உ. |
| ஆங்கிலத்தை அகற்றி இந்தி | | அதனிடத்தில் அமைக்க நின்றார் | | தாம்பதவி நீடிக்கவே | | தன்னலமாய் மந்திரிமார் (இரு) |
|