1 |
| பாரே யுயர் மேலையவர் பலவாயின் கட்டாயம் | | சீராயொரே யினமாமொழி செம்மை யுறக்கற்பார் | | நீரோடு நெய்யிதளே நிகராகத் தமிழ் நாட்டில் | | சேராத மும்மொழி கற்கவே செய்தல் நலமாமோ? |
|
2 |
| குடும்பின் வழிதொடர்ந்தே குலத்தொழிலாய்ப் பயின்றாலும் | | வடுவின்றியே கற்கப் பொது வலிமை இருமொழிக்கே | | நெடுங்கால மாயுயர் கல்வியை நீத்த தமிழ் நாட்டில் | | திடுமென்று மும்மொழி கற்கவே தெரித்தல் நலமாமோ? |
|
3 |
| பனிமா மழையல்லா நிலை பகல்போல நள்ளிரவும் | | சுனையே குளித்தெழுந்தாலும் பின் சோரு முடல் புழுங்கக் | | கனலாய் வருங்கதிரோன் சினங்கடுகுந் தமிழ்நாட்டில் | | வினையாக மும்மொழி கற்கவே விளைத்தல் நலமாமோ? |
|
4 |
| குறிதாகிய வாழ்நாள் பினுங் குறுகிவரும் நாளில் | | அறிவாகிய துறையே பல அறிதல் மிக அறிவாம் | | சிறிதாயினும் இந்திமொழி செல்லாத் தமிழ் நாட்டில் | | வறிதாக மும்மொழி கற்கவே வகுத்தல் நலமாமோ? |
|