|
5 |
| கொளவே யிதுவழி நன்றெனக் குறித்தோன் அதைத் தானே | | உளமாரமுன் வெளியாகவே ஒழுகி வரல் வேண்டும் | | அளவாயிரு மொழியேஅறி அமைச்சர் தமிழ் நாட்டில் | | வளமாக மும்மொழி கற்கவே வலித்தல் நலமாமோ? |
|
|
191. இந்தியெதிர்ப்பிற்குப் பெருமாள் துணை |
|
'மாதர்பிறைக் கண்ணியானை' என்ற மெட்டு |
1 |
| சொன்ன வண்ணஞ் செய்த பெருமாள் - தமிழ் | | தன்னை வண்ணஞ்செய்ய வருநாள் | | இன்னும் இந்தி வந்து பொருமேல் - படை | | என்ன எய்தும் வெல்லும் திருமால். |
|
2 |
| காஞ்சிநகர் வாழ்எல் லாரும் - இன்று | | கன்னித் தமிழ்காக்க வாரும் | | காஞ்சி சூடும்கடும் போரும் - வரின் | | காணும் வெற்றியேபின் பாரும் |
|
192. கல்வி வாயில் (இசைந்த மெட்டிற் பாடுக.) | | இந்நாட்டு மக்கள் எல்லார்க்கும் - என்றும் | | இருமொழித் திட்டமே ஏற்கும் | | முன்னாட்டும் இந்தியே தோற்கும் - அது | | முழுமடத் தன்மையே போர்க்கும். |
| 2 | | வாழ்க்கைக்கே கல்வியை ஓதும் - அந்த | | வகையாருக் குத்தமிழ் போதும் | | மேற்கல்விக் கேவெளிப் போதும் - அவர் | | மேற்கொள்ள ஆங்கிலத் தோதும். |
| | |