பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்161

5
கொளவே யிதுவழி நன்றெனக் குறித்தோன் அதைத் தானே
உளமாரமுன் வெளியாகவே ஒழுகி வரல் வேண்டும்
அளவாயிரு மொழியேஅறி அமைச்சர் தமிழ் நாட்டில்
வளமாக மும்மொழி கற்கவே வலித்தல் நலமாமோ?
 
191. இந்தியெதிர்ப்பிற்குப் பெருமாள் துணை
'மாதர்பிறைக் கண்ணியானை' என்ற மெட்டு
1
சொன்ன வண்ணஞ் செய்த பெருமாள் - தமிழ்
தன்னை வண்ணஞ்செய்ய வருநாள்
இன்னும் இந்தி வந்து பொருமேல் - படை
என்ன எய்தும் வெல்லும் திருமால்.
2
காஞ்சிநகர் வாழ்எல் லாரும் - இன்று
     கன்னித் தமிழ்காக்க வாரும்
காஞ்சி சூடும்கடும் போரும் - வரின்
     காணும் வெற்றியேபின் பாரும்
192. கல்வி வாயில்
(இசைந்த மெட்டிற் பாடுக.)
இந்நாட்டு மக்கள் எல்லார்க்கும் - என்றும்
      இருமொழித் திட்டமே ஏற்கும்
முன்னாட்டும் இந்தியே தோற்கும் - அது
      முழுமடத் தன்மையே போர்க்கும்.
2
வாழ்க்கைக்கே கல்வியை ஓதும் - அந்த
     வகையாருக் குத்தமிழ் போதும்
மேற்கல்விக் கேவெளிப் போதும் - அவர்
      மேற்கொள்ள ஆங்கிலத் தோதும்.