பக்கம் எண் :

162இசைத்தமிழ்க் கலம்பகம்

3
கல்வி வாயில்இரு மொழியும் - ஆகும்
    கற்பிக்கவே நல்ல வழியும்
தெள்ளுந் தமிழ்வளம் பொழியும் - இங்குத்
    தேங்கு மடமையும் ஒழியும்.
4
செந்தமிழே தமிழ் தேரும் - அதிற்
    செய்த கலைநூலைச் சேரும்
ஏந்து மொழியிலும் பேரும் - சொல்லும்
     எந்தமி ழாகாது பாரும்.
5
மந்திரி மார்தமி ழறியார் - அதன்
     வரலாற்றி லும்மிக வறியார்
இந்தியைப் புகுத்தும் நெறியார் - அவர்
    என்றும் பதவிகொள் குறியார்.
 
193. பயனில் மொழி கற்கக் காலமின்மை
"அன்னையும் தந்தையும் தானே" என்ற மெட்டு
ப.
நாம்இந்தி கற்கநாள் ஏது - பல
நல்லறி வியற்கேநாள் இல்லாத போது
(நாம்)
து. ப.
காமுறு கல்வியிப் போது - பல
     கரையறு கடல்களாய்ப் பரவும் ஓயாது
ஏமுற நாம் நிலமீது - இன்று
     இருக்கும் நாள் வரவரச் சுருக்கமென்றோது
(நாம்)
2
தீந்தமிழ் ஆங்கிலம் தானே - இங்குத்
    திறமுறக் கற்றிடின் பிறமொழி ஏனே
மாந்தரின் மொழித்திறம் இன்றே - நன்று
     மருவும் சராசரி இருமொழி யென்றே