|
3 |
| ஏந்தியே இந்தியைத் தாங்கும் - பலர் | | ஏதும் அதையறியார் என்றசொல் ஓங்கும் | | வாழ்ந்திட ஒருபொருள் வேண்டும் - எனின் | | வாங்க எவர்மனமும் தானாகத் தூண்டும். (நாம்) |
|
|
194. தாய் தன் மகனைக் கடிந்துரைத்தல் |
|
"போகாதே போகாதே என் கணவா" என்ற மெட்டு |
| போடாதே குடவோலை என்மகனே - அந்தப் | | பொல்லாத இந்திக்கே என்று சொன்னேன் | | கூடாத பேரோடு கூடி நீயும் - மிகக் | | கூர்கெட்டுப் போனாய்நான் என்ன செய்வேன். |
|
2 |
| ஆரியத் தாலேநம் செந்தமிழ்க்கே - முன்னே | | ஆயின கேட்டினுக் களவேயில்லை | | சீரிய செம்மையால் மீந்திருக்கும் - அந்தச் | | சிற்றள வும்இந்தி யால்அழியும். |
|
3 |
| இந்தியால் தந்தமிழ் கெடுவதில்லை - என்று | | இந்நாட்டைக் காட்டிக் கொடுப்பார் சொல்வார் | | முந்தியே மறைமலை யடிகள் சொன்ன - நல்ல | | மூதுரை யேதலை மேற்கொள்ளுவாய். |
|
4 |
| பயனில்சொல் பாராட்டு வானை முன்னே - மக்கட் | | பதரென்று சொன்னாரே வள்ளுவரும் | | பயனிறைத் தீங்கே தரும் இந்தியை - இன்று | | பயில்வாரை என்னென்று சொல்லுவதே. |
|
5 |
| நல்ல தமிழ்க்குடி நாம் பிறந்தோம் - முன்னே | | நாகரிகங் கண்டார் நம்மவரே | | தெள்ளுந் தமிழ்இன்றி இவ்வுலகில் - நாமே | | தீண்டா விலங்குக ளாய்விடுவோம். |
|