பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்163

3
ஏந்தியே இந்தியைத் தாங்கும் - பலர்
     ஏதும் அதையறியார் என்றசொல் ஓங்கும்
வாழ்ந்திட ஒருபொருள் வேண்டும் - எனின்
     வாங்க எவர்மனமும் தானாகத் தூண்டும்.
(நாம்)
 
194. தாய் தன் மகனைக் கடிந்துரைத்தல்
"போகாதே போகாதே என் கணவா" என்ற மெட்டு
போடாதே குடவோலை என்மகனே - அந்தப்
     பொல்லாத இந்திக்கே என்று சொன்னேன்
கூடாத பேரோடு கூடி நீயும் - மிகக்
     கூர்கெட்டுப் போனாய்நான் என்ன செய்வேன்.
2
ஆரியத் தாலேநம் செந்தமிழ்க்கே - முன்னே
    ஆயின கேட்டினுக் களவேயில்லை
சீரிய செம்மையால் மீந்திருக்கும் - அந்தச்
     சிற்றள வும்இந்தி யால்அழியும்.
3
இந்தியால் தந்தமிழ் கெடுவதில்லை - என்று
    இந்நாட்டைக் காட்டிக் கொடுப்பார் சொல்வார்
முந்தியே மறைமலை யடிகள் சொன்ன - நல்ல
     மூதுரை யேதலை மேற்கொள்ளுவாய்.
4
பயனில்சொல் பாராட்டு வானை முன்னே - மக்கட்
     பதரென்று சொன்னாரே வள்ளுவரும்
பயனிறைத் தீங்கே தரும் இந்தியை - இன்று
     பயில்வாரை என்னென்று சொல்லுவதே.
5
நல்ல தமிழ்க்குடி நாம் பிறந்தோம் - முன்னே
     நாகரிகங் கண்டார் நம்மவரே
தெள்ளுந் தமிழ்இன்றி இவ்வுலகில் - நாமே
    தீண்டா விலங்குக ளாய்விடுவோம்.