|
6 |
| கேளாதே கேளாதே என்மகனே - அந்தக் | | கேடுசெய் கோடரிக் காம்புகள் சொல் | | வாளாலே நம்தமிழ் மானத்தையே - காத்து | | வாழுவம் வள்ளுவன் சொன்ன வழி. |
|
|
195. சின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்பு |
|
பண் (நாதநாமக்கிரியை) தாளம் - முன்னை |
ப. |
| தீக்குளித்தே யிறந்தான் - சின்னச்சாமி | | தீக்குளித்தே யிறந்தான் - திடுக்கிடத் |
|
து. ப. |
| தாக்கும் இந்திவந்து தண்டமிழ் கெடுமென்று | | தன்மானந் ததும்பியே தாங்கருந் துயர்கொண்டு (தீக்) |
|
உ.1 |
| ஆர்க்குஞ் சொல்லாமல்தன் அகத்தைவிட் டுச்சென்றே | | அழகிய திருச்சியில் அமைகூடல் நிலையத்தில் | | வார்த்தனன் கன்னெய்மேல் வைத்தனன் தீயும்பின் | | வடிவொரு சுடரென வானவர் விருந்தெனத் (தீக்) |
|
2 |
| நாடென்றும் இனமென்றும் நம்புந்தன் மதமென்றும் | | நானிலத்தே மாந்தர் நல்குவர் உடல்வேக | | ஈடொன்று மில்லாமல் இனியதாய் மொழிக்கென்றே | | ஈந்துநல் வலவுடல் இளமையில் உயர்வாகத் (தீக்) |
|
3 |
| வெந்தெரி யுடலெல்லாம் விளம்பறு வேதனை | | விருவிருத் தேறினும் வீறுகொண் டேறென | | எந்தமிழ் வாழ்கவே இந்தியே ஒழிகென | | இறுதி வரைகூறி இதுவேநல் லாறெனத் (தீக்) |
|