பக்கம் எண் :

164இசைத்தமிழ்க் கலம்பகம்

6
கேளாதே கேளாதே என்மகனே - அந்தக்
     கேடுசெய் கோடரிக் காம்புகள் சொல்
வாளாலே நம்தமிழ் மானத்தையே - காத்து
     வாழுவம் வள்ளுவன் சொன்ன வழி.
 
195. சின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்பு
பண் (நாதநாமக்கிரியை)
தாளம் - முன்னை
ப.
தீக்குளித்தே யிறந்தான் - சின்னச்சாமி
தீக்குளித்தே யிறந்தான் - திடுக்கிடத்
து. ப.
தாக்கும் இந்திவந்து தண்டமிழ் கெடுமென்று
தன்மானந் ததும்பியே தாங்கருந் துயர்கொண்டு
(தீக்)
உ.1
ஆர்க்குஞ் சொல்லாமல்தன் அகத்தைவிட் டுச்சென்றே
     அழகிய திருச்சியில் அமைகூடல் நிலையத்தில்
வார்த்தனன் கன்னெய்மேல் வைத்தனன் தீயும்பின்
     வடிவொரு சுடரென வானவர் விருந்தெனத்
(தீக்)
2
நாடென்றும் இனமென்றும் நம்புந்தன் மதமென்றும்
     நானிலத்தே மாந்தர் நல்குவர் உடல்வேக
ஈடொன்று மில்லாமல் இனியதாய் மொழிக்கென்றே
     ஈந்துநல் வலவுடல் இளமையில் உயர்வாகத்
(தீக்)
3
வெந்தெரி யுடலெல்லாம் விளம்பறு வேதனை
     விருவிருத் தேறினும் வீறுகொண் டேறென
எந்தமிழ் வாழ்கவே இந்தியே ஒழிகென
    இறுதி வரைகூறி இதுவேநல் லாறெனத்
(தீக்)