பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்165

4
பைந்தமிழை முன்காட்டிப் பகைவ ரிடங்கொடுத்துப்
     பணங்கொழுக் குந்தலைமைப் பண்பற்றபே ராசான்மார்
ஐந்தாம் வகுப்பே கற்றோன் அடைந்தபண் பாடுமின்றி
     அஃறிணை யாயிருத்தல் அறிவாரெல் லாருந்தான் பார்
(தீக்)
5
எருமைபோல் உணர்வின்றி என்றும்கீழ் அடிமையாய்
     இருந்தேகும் தமிழாநீ இனியேனும் மடந்தீரப்
பெருமைபேர் எழுதிக்கல் பெருஞ்சின்னச் சாமிக்குப்
     பிறைமாடக் கோயிற்கண் பெயராது நடவாராய்
(தீக்)
196. தீக்குளித்த சின்னச்சாமி (சின்னாண்டான்) புலம்பல்
'ஆசையும் என் நேசமும்' என்ற மெட்டு
கொளு
தீயினுந் தீயது தென்னிந்தி யாட்சியப்பா.
தாயையுங் கொல்வது தன்னல மாட்சியப்பா.
ப.
மானமும் தன் மானமும் - கெட்டு
வாழ்வதினும் மாளுவதே மேலானதாம்
செந்- தேனெனும் தென் தீந்தமிழ் - கெட்டுத்
தீருவதைக் கேள்வியுறல் ஏலாததாம்.
உ.
மண்தோன்றாக் காலத்திலே மாண்குமரி நாட்டினிலே
மதிநுதற் கண்ணார் மாண்பாய் வளர்த்த தமிழ்
     வடமொழியால் தளர்ந்த பின்னே
மறைமலையாலே
வளங்கொண்டும் மேலே மாய்வதுவோ
(மானமும்)