|
4 |
| பைந்தமிழை முன்காட்டிப் பகைவ ரிடங்கொடுத்துப் | | பணங்கொழுக் குந்தலைமைப் பண்பற்றபே ராசான்மார் | | ஐந்தாம் வகுப்பே கற்றோன் அடைந்தபண் பாடுமின்றி | | அஃறிணை யாயிருத்தல் அறிவாரெல் லாருந்தான் பார் (தீக்) |
|
5 |
| எருமைபோல் உணர்வின்றி என்றும்கீழ் அடிமையாய் | | இருந்தேகும் தமிழாநீ இனியேனும் மடந்தீரப் | | பெருமைபேர் எழுதிக்கல் பெருஞ்சின்னச் சாமிக்குப் | | பிறைமாடக் கோயிற்கண் பெயராது நடவாராய் (தீக்) |
|
196. தீக்குளித்த சின்னச்சாமி (சின்னாண்டான்) புலம்பல் |
|
'ஆசையும் என் நேசமும்' என்ற மெட்டு |
கொளு |
| தீயினுந் தீயது தென்னிந்தி யாட்சியப்பா. | | தாயையுங் கொல்வது தன்னல மாட்சியப்பா. |
|
ப. |
| மானமும் தன் மானமும் - கெட்டு | | வாழ்வதினும் மாளுவதே மேலானதாம் | | செந்- தேனெனும் தென் தீந்தமிழ் - கெட்டுத் | | தீருவதைக் கேள்வியுறல் ஏலாததாம். |
|
உ. |
| மண்தோன்றாக் காலத்திலே மாண்குமரி நாட்டினிலே | | மதிநுதற் கண்ணார் மாண்பாய் வளர்த்த தமிழ் | | வடமொழியால் தளர்ந்த பின்னே | | மறைமலையாலே | | வளங்கொண்டும் மேலே மாய்வதுவோ (மானமும்) |
|