பக்கம் எண் :

188இசைத்தமிழ்க் கலம்பகம்

2
தன்னாட்டினமும் தன்னியல் மொழியும் தாழ்வாம் இந்நாளும்
மன்னாட்டினமும் மாய்ந்துள மொழியும் வாழ்வாம் எந்நாளும்
இந்நாள் இதனின் விலகும் வழியும் என்னென்றே கேளும்
இனிதாம் மறைமலை யடிகள் தமிழே என்றுங் கையாளும்.
224. மொழிவழி நாடு
'பாலும் பழமும் கைகளி லேந்தி' என்ற மெட்டு
ப.
முன்னும் உலகில் மொழிவழி நாடு
மொழியும் இனமும் ஒருவழிப் பாடு
சென்னை யெனுந்துறைத் தலைநக ரோடு
சிறந்தே ஓங்கும் செந்தமிழ் நாடு.
து. ப.
நகரின் பெயரால் நாட்டொரு கூறே
நடையில் முரண்தமிழ் நாட்டின் பேரே
பகரும் மொழியால் பகுத்துள வாறே
பரவு தமிழ்நா டென்பது சீரே.
(முன்னும்)
224. தமிழுக்குக் கலைக்கல்லூரி யின்மை
'பாலிருக்கும் பழமிருக்கும்' என்ற மெட்டு
ப.
தமிழகத்திற் கலைக்கல்லூரி தமிழ்க்கிருக்காது
தனித்தமிழ்க் கல்லூரியிலே கலையிருக்காது
து. ப.
தமிழுக்கென்றே கலைக்கல்லூரி வகுப்பிருந்தாலும்
கலைச்சொற்களிற் பலவும் நோக்கின் தமிழிருக்காது