|
2 |
| பிழைக்கும் வழியும் பெருஞ்சம்பளமும் பெயர் மதிப்பதிகாரம் மிகத் | | தழைக்கும் வழியே தமிழில் இல்லை தாழ்வுதானிது பாரும் (தாய்) |
|
3 |
| ஆட்சிமொழியென் றாகிவிட்டால் அரியதென்னும் தமிழும் - மிக | | மாட்சிமையாம் அதையே பயிலமனமும் நன்றாய் அமிழும் (தாய்) |
|
243. சாமிநாதையர் பதிப்பு |
|
பண் - தோடி தாளம் - முன்னை |
ப. |
| சாமிநாதையர் மதிப்பே சாற்றும் பதிப்பே |
|
து. ப. |
| தேமுறு தமிழ்நூலைத் திருத்தியே பதித்தவர் | | தாம் உறுதவப் பலர் தம்முளே தலைக்கிவர் (சாமி) |
|
உ.1 |
| ஏமுறு பாடங்கொள்வும் இலகருஞ் சொல்லொழுங்கும் | | ஏனைப் பாடக்குறிப்பும் இயலொப்புமை மேற்கோளும் | | வேமுறு பசியினர் விரும்பும் உணவை யெல்லாம் | | விரவியுண்ணும் அளவில் வேறு வேறிட்ட போலும் (சாமி) |
|
2 |
| தென்கலைச் செல்வன் சென்னை மண்டலக் கல்லூரியில் | | தென்மொழித் தலையெனத் திகழ்ந்தபெரும் பேராசான் | | பண்டிதன் பண்டாரகன் என்று பெரிதாய்ச் சொல்லும் | | பட்டம் பதவியெல் லாம்சற்றும் தேவையே யில்லை (சாமி) |
|
3 |
| நூற்பதிப் போரெல்லாரும் நோக்க பதிப்புக்கலை | | நுண்தொழில் திறனெல்லாம் பண்படும் தனிமேற்கே | | பார்ப்பதற் கழகாப் பட்டுக்கட் டடஞ்செய்யும் | | பரிசுப் பதிப்புகளும் பயனில்லை படிப்பார்க்கே (சாமி) |
|