'குரும்பைநிகர் மென்முலையாள்' என்ற மெட்டு |
பண் - காம்போதி தாளம் - முன்னை |
1 |
| பலதிசையும் பெரும்பான் மக்கள் பஞ்சையரா யிறத்தல் கண்டும் | | அலகறும்பொற் செலவிற் செய்யும் அணுக்குண்டுப் பயிற்சி நாளில் | | இலகுறுகோள் எட்டுஞ் சேர எய்திநின்ற குறிப்பை நோக்கின் | | உலகமெல்லாம் ஓரரசாய் ஒன்றுகவே என்ப போலும். |
|
2 |
| விண்ணிடத்தின் அன்றமையும் விரிநீரும் நஞ்சமாகப் | | பண்ணுமழி படைப்பயிற்சி பலர்தடுத்துந் தொடரு நாளில் | | எண்ணுறுகோள் இறும்பூதாக எய்திநின்ற குறிப்பை நோக்கின் | | மண்ணகமே ஓரரசாய் மன்னுகவே என்ப போலும். |
|
3 |
| போரெனவே யிருவன்னாடு போட்டியிட்டுப் பின்பின்னேவ | | ஏரவுயர் பெருங்கலங்கள் இயங்குகின்ற பரவெளியில் | | சீருடைய கோள்களெட்டும் செறிந்துநின்ற குறிப்பை நோக்கின் | | பாரனைத்தும் ஓரரசாய்ப் பண்படுக என்பபோலும். |
|
4 |
| ஈனுலகில் எறும்புதேனீ இன்னலமாய் மன்னிவாழ | | மானமிகச் செருக்குமாந்தர் மாளமுரண் மூளுநாளில் | | வானகமெண் கோள்கள்சேர வந்துநின்ற குறிப்பை நோக்கின் | | மாநிலமே ஓரரசாய் மருவுகவே என்ப போலும். |
|
5 |
| பெருவெள்ளமும் கடுங்குளிரும் பிதிர்மலையும் நிலநடுக்கும் | | உருமிகவிந் நிலமீதெங்கும் உண்டாக வியன்மா வானில் | | ஒருகுலம்போல் இருநால்கோளும் ஒருங்குநின்ற குறிப்பை நோக்கின் | | இருநிலமே ஓரரசாய் இணைந்திடுக என்ப போலும். |
|