பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்215

3
        முற்றுந் துறந்தபின் முக்காலச் செய்தியும்
             உற்றுத் தெளிந்தொன்றும் உண்ணாரே அந்தணர்
        சற்றுந் துறவாமலே - நகர்ச்
             சார்பா யிருந்தேயிற் சீராக வாழாரே
(அந்தணர்)
257. தமிழகம் அனைவர்க்கும் தாயகம்
'ஒன்றையே நினைத்திருந்து' என்ற மெட்டு
1
        உயர்திணை தோன்றி வந்து
        உலகமுன் மொழியெ ழுந்து
        ஒருகுலம் ஒருதே வென்று
        உணர்த்து கின்ற தாயகம்
        உலகம் போற்றும் தாயகம்
        உயர்ந்த தமிழன் தாயகம்
        இலகு முதனூல் தாயகம்
        என்று முள்ள தாயகம்.
(உயர்)
2
        எந்த வூருஞ் சொந்த வூராம்
        என்று ரைக்கும் தாயகம்
        எவரையும்நல் உறவென் றெண்ணி
        ஏற்கும் நல்ல தாயகம்
        வந்தவரையே வாழ வைக்கும்
        வண்மை மிக்க தாயகம்
        வாளிற் கொடிய இரண்ட கர்க்கும்
        வாழ்வு நல்கும் தாயகம்
(உயர்)