|
3 |
| முற்றுந் துறந்தபின் முக்காலச் செய்தியும் | | உற்றுத் தெளிந்தொன்றும் உண்ணாரே அந்தணர் | | சற்றுந் துறவாமலே - நகர்ச் | | சார்பா யிருந்தேயிற் சீராக வாழாரே (அந்தணர்) |
|
257. தமிழகம் அனைவர்க்கும் தாயகம் |
|
'ஒன்றையே நினைத்திருந்து' என்ற மெட்டு |
1 |
| உயர்திணை தோன்றி வந்து | | உலகமுன் மொழியெ ழுந்து | | ஒருகுலம் ஒருதே வென்று | | உணர்த்து கின்ற தாயகம் | | உலகம் போற்றும் தாயகம் | | உயர்ந்த தமிழன் தாயகம் | | இலகு முதனூல் தாயகம் | | என்று முள்ள தாயகம். (உயர்) |
|
2 |
| எந்த வூருஞ் சொந்த வூராம் | | என்று ரைக்கும் தாயகம் | | எவரையும்நல் உறவென் றெண்ணி | | ஏற்கும் நல்ல தாயகம் | | வந்தவரையே வாழ வைக்கும் | | வண்மை மிக்க தாயகம் | | வாளிற் கொடிய இரண்ட கர்க்கும் | | வாழ்வு நல்கும் தாயகம் (உயர்) |
|